இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஆபகூக் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.சங் 86:1-17 சங் 90:1-17
2கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.ஆபகூ 3:16 ஆபகூ 1:5-10 யாத் 9:20 யாத் 9:21 2நாளா 34:27 2நாளா 34:28 யோபு 4:12-21 சங் 119:120 ஏசா 66:2 எரே 36:21-24 தானி 8:17 எபிரெ 11:7 எபிரெ 12:21 வெளிப் 15:4
3தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; (சேலா.) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.நியா 5:4 நியா 5:5 சங் 68:7 சங் 68:8 ஏசா 64:3
4அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.யாத் 13:21 யாத் 14:20 நெகே 9:12 சங் 104:2 ஏசா 60:19 ஏசா 60:20 மத் 17:2 1தீமோ 6:16 வெளிப் 21:23 வெளிப் 22:5
5அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.யாத் 12:29 யாத் 12:30 எண் 14:12 எண் 16:46-49 சங் 78:50 சங் 78:51 நாகூ 1:2 நாகூ 1:3
6அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.யாத் 15:17 யாத் 21:31 எண் 34:1-29 உபா 32:8 அப் 17:26
7கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.யாத் 15:14-16 எண் 22:3 எண் 22:4 யோசு 2:10 யோசு 9:24
8கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?யாத் 14:21 யாத் 14:22 யோசு 3:16 யோசு 3:17 சங் 114:3 சங் 114:5 ஏசா 50:2 நாகூ 1:4 மாற் 4:39 வெளிப் 16:12
9கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.) நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.உபா 32:23 சங் 7:12 சங் 7:13 சங் 35:1-3 ஏசா 51:9 ஏசா 51:10 ஏசா 52:10 புலம் 2:4
10பர்வதங்கள் உம்மைக்கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று; ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது.ஆபகூ 3:6 யாத் 19:16-18 நியா 5:4 நியா 5:5 சங் 68:7 சங் 68:8 சங் 77:18 சங் 97:4 சங் 97:5 சங் 114:4 சங் 114:6 ஏசா 64:1 ஏசா 64:2 எரே 4:24 மீகா 1:4 நாகூ 1:5 மத் 27:51 வெளிப் 6:14 வெளிப் 20:11
11சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.யோசு 10:12 யோசு 10:13 ஏசா 28:21 ஏசா 38:8
12நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.எண் 21:23-35 யோசு 6:1-12 நெகே 9:22-24 சங் 44:1-3 சங் 78:55 அப் 13:19
13உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.யாத் 14:13 யாத் 14:14 யாத் 15:1 யாத் 15:2 சங் 68:7 சங் 68:19-23
14என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர்.யாத் 11:4-7 யாத் 12:12 யாத் 12:13 யாத் 12:29 யாத் 12:30 யாத் 14:17 யாத் 14:18 சங் 78:50 சங் 78:51 சங் 83:9-11
15திரளான தண்ணீர்க் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.ஆபகூ 3:8 சங் 77:19
16நான் கேட்டபோது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.ஆபகூ 3:2 ஆபகூ 1:5-11
17அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,உபா 28:15-18 உபா 28:30-41 எரே 14:2-8 யோவே 1:10-13 யோவே 1:16-18 ஆமோ 4:6-10 ஆகா 2:16 ஆகா 2:17
18நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.உபா 12:18 1சாமு 2:1 யோபு 13:15 சங் 33:1 சங் 46:1-5 சங் 85:6 சங் 97:12 சங் 104:34 சங் 118:15 சங் 149:2 ஏசா 41:16 ஏசா 61:10 சகரி 10:7 லூக் 1:46 லூக் 1:47 ரோம 5:2 ரோம 5:3 பிலிப் 4:4 யாக் 1:2 யாக் 1:9 யாக் 1:10 1பேது 1:8 1பேது 4:12 1பேது 4:13
19ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.சங் 18:1 சங் 27:1 சங் 46:1 ஏசா 12:2 ஏசா 45:24 சகரி 10:12 2கொரி 12:9 2கொரி 12:10 எபே 3:16 பிலிப் 4:13 கொலோ 1:11
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.