இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஆபகூக் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம்.ஏசா 22:1 நாகூ 1:1
2கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!சங் 13:1 சங் 13:2 சங் 74:9 சங் 74:10 சங் 94:3 வெளிப் 6:10
3நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.சங் 12:1 சங் 12:2 சங் 55:9-11 சங் 73:3-9 சங் 120:5 சங் 120:6 பிரச 4:1 பிரச 5:8 எரே 9:2-6 எசே 2:6 மீகா 7:1-4 மத் 10:16 2பேது 2:8
4ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.சங் 11:3 சங் 119:126 மாற் 7:9 ரோம 3:31
5நீங்கள் புறஜாதிகளை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.உபா 4:27 எரே 9:25 எரே 9:26 எரே 25:14-29
6இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.உபா 28:49-52 2இரா 24:2 2நாளா 36:6 2நாளா 36:17 ஏசா 23:13 ஏசா 39:6 ஏசா 39:7 எரே 1:15 எரே 1:16 எரே 4:6 எரே 4:8 எரே 5:15 எரே 6:22 எரே 6:23 எரே 21:4 எரே 25:9
7அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.எரே 39:5-9 எரே 52:9-11 எரே 52:25-27 உபா 5:19 உபா 5:27
8அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.உபா 28:49 ஏசா 5:26-28
9அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.ஆபகூ 1:6 ஆபகூ 2:5-13 உபா 28:51 உபா 28:52 எரே 4:7 எரே 5:15-17 எரே 25:9
10அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.2இரா 24:12 2இரா 25:6 2இரா 25:7 2நாளா 36:6 2நாளா 36:10
11அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.தானி 4:30-34
12கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.உபா 33:27 சங் 90:2 சங் 93:2 ஏசா 40:28 ஏசா 57:15 புலம் 5:19 மீகா 5:2 1தீமோ 1:17 1தீமோ 6:16 எபிரெ 1:10-12 எபிரெ 13:8 வெளிப் 1:8 வெளிப் 1:11
13தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?யோபு 15:15 சங் 5:4 சங் 5:5 சங் 11:4-7 சங் 34:15 சங் 34:16 1பேது 1:15 1பேது 1:16
14மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?நீதி 6:7
15அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.எரே 16:16 எசே 29:4 எசே 29:5 ஆமோ 4:2 மத் 17:27
16ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.ஆபகூ 1:11 உபா 8:17 ஏசா 10:13-15 ஏசா 37:24 எசே 28:3 எசே 29:3 தானி 4:30 தானி 5:23
17இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?ஆபகூ 1:9 ஆபகூ 1:10 ஆபகூ 2:5-8 ஆபகூ 2:17-8 ஏசா 14:16 ஏசா 14:17 எரே 25:9-26 எரே 46:1-49 எரே 52:1-34 எசே 25:1-30
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.