| 1 | சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து. | ஏசா 14:6 எரே 25:9 எரே 50:23 எரே 51:20-23 |
| 2 | வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார். | ஏசா 10:5-12 எரே 25:29 |
| 3 | அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜூவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும். | ஏசா 63:1-3 சகரி 1:8 சகரி 6:2 வெளிப் 6:4 வெளிப் 12:3 |
| 4 | இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும். | நாகூ 3:2 நாகூ 3:3 ஏசா 37:24 ஏசா 66:15 எரே 4:13 எசே 26:10 தானி 11:40 |
| 5 | அவன் தன் பிரபலஸ்தரை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, அலங்கத்துக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும். | ஏசா 21:5 எரே 50:29 எரே 51:27 எரே 51:28 |
| 6 | ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோகும். | ஏசா 45:1 ஏசா 45:2 |
| 7 | அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள். | ஏசா 38:14 ஏசா 59:11 லூக் 23:27 லூக் 23:48 |
| 8 | நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை. | ஆதி 10:11 |
| 9 | வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது. | ஏசா 33:1 ஏசா 33:4 எரே 51:56 |
| 10 | அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது. | நாகூ 3:7 ஆதி 1:2 ஏசா 13:19-22 ஏசா 14:23 ஏசா 24:1 ஏசா 34:10-15 எரே 4:23-26 எரே 51:62 செப் 2:13-15 செப் 3:6 வெளிப் 18:21-23 |
| 11 | சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே? | நாகூ 3:1 யோபு 4:10 யோபு 4:11 ஏசா 5:29 எரே 2:15 எரே 4:7 எரே 50:17 எரே 50:44 எசே 19:2-8 செப் 3:3 |
| 12 | சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீறி, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று. | சங் 17:12 ஏசா 10:6-14 எரே 51:34 |
| 13 | இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | நாகூ 3:5 எரே 21:13 எரே 50:31 எரே 51:25 எசே 5:8 எசே 26:3 எசே 28:22 எசே 29:3 எசே 29:10 எசே 35:3 எசே 38:3 எசே 39:1 |