| 1 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 2 | நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்: |
| 3 | இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், | லேவி 17:8 லேவி 17:12 லேவி 17:13 லேவி 17:15 |
| 4 | பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும் அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான். | லேவி 1:3 உபா 12:5 உபா 12:6 உபா 12:13 உபா 12:14 எசே 20:40 யோவா 10:7 யோவா 10:9 யோவா 14:6 |
| 5 | ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். | ஆதி 21:33 ஆதி 22:2 ஆதி 22:13 ஆதி 31:54 உபா 12:2 1இரா 14:23 2இரா 16:4 2இரா 17:10 2நாளா 28:4 எசே 20:28 எசே 22:9 |
| 6 | அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். | லேவி 3:2 லேவி 3:8 லேவி 3:13 |
| 7 | தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது. | உபா 32:17 2நாளா 11:15 சங் 106:37 யோவா 12:31 யோவா 14:30 1கொரி 10:20 2கொரி 4:4 எபே 2:2 வெளிப் 9:20 |
| 8 | மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளையிட்டு, | லேவி 17:4 லேவி 17:10 லேவி 1:2 லேவி 1:3 நியா 6:26 1சாமு 7:9 1சாமு 10:8 1சாமு 16:2 2சாமு 24:25 1இரா 18:30-38 மல்கி 1:11 |
| 9 | அதை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். |
| 10 | இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப்பண்ணுவேன். | லேவி 17:11 லேவி 3:17 லேவி 7:26 லேவி 7:27 லேவி 19:26 ஆதி 9:4 உபா 12:16 உபா 12:23 உபா 15:23 1சாமு 14:33 எசே 33:25 எசே 44:7 அப் 15:20 அப் 15:29 எபிரெ 10:29 |
| 11 | மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. | லேவி 8:15 லேவி 16:11 லேவி 16:14-19 மத் 20:28 மத் 26:28 மாற் 14:24 ரோம 3:25 ரோம 5:9 எபே 1:7 கொலோ 1:14 கொலோ 1:20 எபிரெ 9:22 எபிரெ 13:12 1பேது 1:2 1யோவா 1:7 1யோவா 2:2 வெளிப் 1:5 |
| 12 | அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். | யாத் 12:49 |
| 13 | இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன். | லேவி 7:26 |
| 14 | சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். | லேவி 17:11 லேவி 17:12 ஆதி 9:4 உபா 12:23 |
| 15 | தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும் அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைச் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான். | லேவி 22:8 யாத் 22:31 உபா 14:21 எசே 4:14 எசே 44:31 |
| 16 | அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார். | லேவி 5:1 லேவி 7:18 லேவி 19:8 லேவி 20:17 லேவி 20:19 லேவி 20:20 எண் 19:19 எண் 19:20 ஏசா 53:11 யோவா 13:8 எபிரெ 9:28 1பேது 2:24 |