இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எரேமியா 10

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:எரே 2:4 எரே 13:15-17 எரே 22:2 எரே 42:15 1இரா 22:19 சங் 50:7 ஏசா 1:10 ஏசா 28:14 ஓசி 4:1 ஆமோ 7:16 1தெச 2:13 வெளிப் 2:29
2புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.லேவி 18:3 லேவி 20:23 உபா 12:30 உபா 12:31 எசே 20:32
3ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.எரே 10:8 எரே 2:5 லேவி 18:30 1இரா 18:26-28 மத் 6:7 ரோம 1:21 1பேது 1:18
4வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.சங் 115:4 சங் 135:15 ஏசா 40:19 ஏசா 40:20
5அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யக்கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.சங் 115:5-8 சங் 135:16-18 ஆபகூ 2:19 1கொரி 12:2 வெளிப் 13:14 வெளிப் 13:15
6கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.யாத் 8:10 யாத் 9:14 யாத் 15:11 உபா 32:31 உபா 33:26 2சாமு 7:22 சங் 35:10 சங் 86:8-10 சங் 89:6-8 ஏசா 40:18 ஏசா 40:25 ஏசா 46:5 ஏசா 46:9
7ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.எரே 5:22 யோபு 37:23 யோபு 37:24 லூக் 12:5 வெளிப் 15:4
8அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.எரே 10:14 எரே 51:17 எரே 51:18 சங் 115:8 சங் 135:18 ஏசா 41:29 ஆபகூ 2:18 சகரி 10:2 ரோம 1:21 ரோம 1:22
9தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.1இரா 10:22 எசே 27:12
10கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.1இரா 18:39 2நாளா 15:3 யோவா 17:3 1தெச 1:9 1யோவா 5:20
11வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.சங் 96:5
12அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.எரே 32:17 எரே 51:15-19 ஆதி 1:1 ஆதி 1:6-9 யோபு 38:4-7 சங் 33:6 சங் 136:5 சங் 136:6 சங் 146:5 சங் 146:6 சங் 148:4 சங் 148:5 யோவா 1:3 கொலோ 1:16
13அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.யோபு 37:2-5 யோபு 38:34 யோபு 38:35 சங் 18:13 சங் 29:3-10 சங் 68:33
14மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.எரே 10:8 எரே 51:17 எரே 51:18 சங் 14:2 சங் 92:6 சங் 94:8 நீதி 30:2 ஏசா 44:18-20 ஏசா 46:7 ஏசா 46:8 ரோம 1:22 ரோம 1:23
15அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.எரே 10:8 எரே 8:19 எரே 14:22 எரே 51:18 உபா 32:21 1சாமு 12:21 ஏசா 41:24 ஏசா 41:29 யோனா 2:8 அப் 14:15
16யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.எரே 51:19 சங் 16:5 சங் 16:6 சங் 73:26 சங் 119:57 சங் 142:5 புலம் 3:24
17அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள்.எரே 6:1 எசே 12:3-12 மீகா 2:10 மத் 24:15
18இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 15:1 எரே 15:2 எரே 16:13 உபா 28:63 உபா 28:64 1சாமு 25:29
19ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.எரே 4:19 எரே 4:31 எரே 8:21 எரே 9:1 எரே 17:13 புலம் 1:2 புலம் 1:12-22 புலம் 2:11-22 புலம் 3:48
20என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.எரே 4:20 ஏசா 54:2 புலம் 2:4-6
21மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.எரே 10:8 எரே 10:14 எரே 2:8 எரே 5:31 எரே 8:9 எரே 12:10 எரே 23:9-32 ஏசா 56:10-12 எசே 22:25-30 எசே 34:2-10 யோவா 10:12 யோவா 10:13 சகரி 10:3
22இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.எரே 1:15 எரே 4:6 எரே 5:15 எரே 6:1 எரே 6:22 ஆபகூ 1:6-9
23கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.சங் 17:5 சங் 37:23 சங் 119:116 சங் 119:117 நீதி 16:1 நீதி 20:24
24கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.எரே 30:11 சங் 6:1 சங் 38:1 ஆபகூ 3:2
25உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.சங் 79:6 சங் 79:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.