| 1 | ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். | ஏசா 8:22 |
| 2 | இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. | ஏசா 50:10 ஏசா 60:1-3 ஏசா 60:19-3 மீகா 7:8 மீகா 7:9 மத் 4:16 லூக் 1:78 லூக் 1:79 லூக் 2:32 யோவா 8:12 யோவா 12:35 யோவா 12:46 எபே 5:8 எபே 5:13 எபே 5:14 1பேது 2:9 1யோவா 1:5-7 |
| 3 | அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள். | ஏசா 26:15 ஏசா 49:20-22 நெகே 9:23 சங் 107:38 ஓசி 4:7 சகரி 2:11 சகரி 8:23 சகரி 10:8 |
| 4 | மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். | ஏசா 14:25 ஏசா 47:6 ஆதி 27:40 லேவி 26:13 எரே 30:8 நாகூ 1:13 |
| 5 | அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். | ஏசா 13:4 1சாமு 14:19 எரே 47:3 யோவே 2:5 நாகூ 3:2 |
| 6 | நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். | ஏசா 7:14 லூக் 1:35 லூக் 2:11 |
| 7 | தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். | 2சாமு 7:16 சங் 2:8 சங் 72:8-11 சங் 89:35-37 எரே 33:15-21 தானி 2:35 தானி 2:44 தானி 7:14 தானி 7:27 லூக் 1:32 லூக் 1:33 1கொரி 15:24-28 |
| 8 | ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார்; அது இஸ்ரவேலின்மேல் இறங்கிற்று. | ஏசா 7:7 ஏசா 7:8 ஏசா 8:4-8 மீகா 1:1-9 சகரி 1:6 சகரி 5:1-4 மத் 24:35 |
| 9 | செங்கல்கட்டு இடிந்துபோயிற்று, பொளிந்த கல்லாலே திரும்பக் கட்டுவோம்; காட்டத்திமரங்கள் வெட்டிப்போடப்பட்டது, அவைகளுக்குப் பதிலாகக் கேதுருமரங்களை வைப்போம் என்று, | ஏசா 26:11 1இரா 22:25 யோபு 21:19 யோபு 21:20 எரே 32:24 எரே 44:28 எரே 44:29 எசே 7:9 எசே 7:27 எசே 30:19 எசே 33:33 |
| 10 | அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும். | 1இரா 7:9-12 1இரா 10:27 மல்கி 1:4 |
| 11 | ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார். | ஏசா 8:4-7 ஏசா 10:9-11 ஏசா 17:1-5 2இரா 15:29 2இரா 16:9 |
| 12 | முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கிறது. | 2இரா 16:6 2நாளா 28:18 எரே 35:11 |
| 13 | ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள். | ஏசா 1:5 ஏசா 26:11 ஏசா 57:17 2நாளா 28:22 யோபு 36:13 எரே 5:3 எரே 31:18-20 எசே 24:13 ஓசி 5:15 ஓசி 7:10 ஓசி 7:16 |
| 14 | ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார். | ஏசா 3:2 ஏசா 3:3 ஏசா 19:15 2இரா 17:6-20 ஓசி 1:4 ஓசி 1:6 ஓசி 1:9 ஓசி 4:5 ஓசி 5:12-14 ஓசி 8:8 ஓசி 9:11-17 ஓசி 13:3 ஆமோ 2:14-16 ஆமோ 3:12 ஆமோ 5:2 ஆமோ 5:3 ஆமோ 6:11 ஆமோ 7:8 ஆமோ 7:9 ஆமோ 7:17 ஆமோ 9:1-9 மீகா 1:6-8 |
| 15 | மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே வால். | ஏசா 3:5 ஏசா 5:13 1சாமு 9:6 |
| 16 | இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள். | ஏசா 3:12 மத் 15:14 மத் 23:16-36 |
| 17 | ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. | ஏசா 10:2 ஏசா 13:18 ஏசா 27:11 ஏசா 62:5 ஏசா 65:19 சங் 147:10 எரே 18:21 சகரி 9:17 |
| 18 | ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும். | ஏசா 1:31 ஏசா 30:30 ஏசா 30:33 ஏசா 33:12 ஏசா 34:8-10 ஏசா 66:16 ஏசா 66:17 எண் 11:1-3 உபா 32:22 யோபு 31:11 யோபு 31:12 ஆமோ 7:4 நாகூ 1:6 நாகூ 1:10 மல்கி 4:1 மத் 13:49 மத் 13:50 மத் 25:41 மாற் 9:43-50 |
| 19 | சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான். | ஏசா 5:30 ஏசா 8:22 ஏசா 24:11 ஏசா 24:12 ஏசா 60:2 எரே 13:16 யோவே 2:2 ஆமோ 5:18 மத் 27:45 அப் 2:20 |
| 20 | வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத்தின்பான். | ஏசா 49:26 லேவி 26:26-29 எரே 19:9 புலம் 4:10 |
| 21 | மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கிறது. | நியா 7:2 1சாமு 14:20 2இரா 15:30 2நாளா 28:6-8 மத் 24:10 கலா 5:15 |