| 1 | பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார். | எரே 36:2 எரே 36:28 எரே 36:32 |
| 2 | அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன். | ரூத் 4:2 ரூத் 4:10 ரூத் 4:11 2கொரி 13:1 |
| 3 | நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு. | நியா 4:4 2இரா 22:14 |
| 4 | இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார். | ஏசா 7:15 ஏசா 7:16 உபா 1:39 யோனா 4:11 ரோம 9:11 |
| 5 | பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: | ஏசா 7:10 |
| 6 | இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், | 1இரா 7:16 2நாளா 13:8-18 |
| 7 | இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு, | ஏசா 17:12 ஏசா 17:13 ஏசா 28:17 ஏசா 59:19 ஆதி 6:17 உபா 28:49-52 எரே 46:7 எரே 46:8 தானி 9:26 தானி 11:10 தானி 11:22 ஆமோ 8:8 ஆமோ 9:5 நாகூ 1:8 லூக் 6:48 வெளிப் 12:15 வெளிப் 12:16 வெளிப் 17:15 |
| 8 | யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். | ஏசா 10:28-32 ஏசா 22:1-7 ஏசா 28:14-22 ஏசா 29:1-9 ஏசா 36:1-37 |
| 9 | ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், | ஏசா 7:1 ஏசா 7:2 ஏசா 54:15 எரே 46:9-11 எசே 38:9-23 யோவே 3:9-14 மீகா 4:11-13 சகரி 14:1-3 வெளிப் 17:12-14 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
| 10 | ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார். | ஏசா 7:5-7 2சாமு 15:31 2சாமு 17:4 2சாமு 17:23 யோபு 5:12 சங் 2:1 சங் 2:2 சங் 33:10 சங் 33:11 சங் 46:1 சங் 46:7 சங் 83:3-18 நீதி 21:30 புலம் 3:37 நாகூ 1:9-12 அப் 5:38 அப் 5:39 |
| 11 | கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது: | எரே 20:7 எரே 20:9 எசே 3:14 அப் 4:20 |
| 12 | இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், | ஏசா 7:2-6 ஏசா 51:12 ஏசா 51:13 2இரா 16:5-7 |
| 13 | சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. | ஏசா 26:3 ஏசா 26:4 லேவி 10:3 எண் 20:12 எண் 20:13 எண் 27:14 ரோம 4:20 |
| 14 | அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். | ஏசா 26:20 சங் 46:1 சங் 46:2 நீதி 18:10 எசே 11:16 |
| 15 | அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். | மத் 11:6 மத் 15:14 மத் 21:44 லூக் 20:17 லூக் 20:18 யோவா 6:66 1கொரி 1:23 |
| 16 | சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார். | ஏசா 29:11 தானி 12:4 |
| 17 | நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன். | ஏசா 25:9 ஏசா 26:8 ஏசா 33:2 ஏசா 64:4 ஆதி 49:18 சங் 27:14 சங் 33:20 சங் 37:34 சங் 39:7 சங் 40:1 சங் 130:5 புலம் 3:25 புலம் 3:26 ஓசி 12:6 மீகா 7:7 ஆபகூ 2:3 1தெச 1:10 2தெச 3:5 எபிரெ 10:36-39 |
| 18 | இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம். | ஏசா 8:3 ஏசா 7:3 ஏசா 7:16 ஏசா 53:10 சங் 22:30 எபிரெ 2:13 எபிரெ 2:14 |
| 19 | அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? | ஏசா 19:3 லேவி 20:6 உபா 18:11 1சாமு 28:8 1நாளா 10:13 2நாளா 33:6 |
| 20 | வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. | ஏசா 8:16 லூக் 10:26 லூக் 16:29-31 யோவா 5:39 யோவா 5:46 யோவா 5:47 அப் 17:11 கலா 3:8-29 கலா 4:21 கலா 4:22 2தீமோ 3:15-17 2பேது 1:19 |
| 21 | இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள். | ஏசா 8:7 ஏசா 8:8 |
| 22 | அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள். | ஏசா 5:30 ஏசா 9:1 2நாளா 15:5 2நாளா 15:6 எரே 13:16 எரே 30:6 எரே 30:7 ஆமோ 5:18-20 செப் 1:14 செப் 1:15 மத் 8:12 மத் 24:29 லூக் 21:25 லூக் 21:26 யூதா 1:13 |