இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 35

                   
புத்தகங்களைக் காட்டு
1வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.ஏசா 29:17 ஏசா 32:15 ஏசா 32:16 ஏசா 40:3 ஏசா 51:3 ஏசா 52:9 ஏசா 52:10 எசே 36:35
2அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.ஏசா 42:10-12 ஏசா 49:13 ஏசா 55:12 ஏசா 55:13 1நாளா 16:33 சங் 65:12 சங் 65:13 சங் 89:12 சங் 96:11-13 சங் 98:7-9 சங் 148:9-13 சகரி 10:7 ரோம 10:15 ரோம 15:10
3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.ஏசா 40:1 ஏசா 40:2 ஏசா 52:1 ஏசா 52:2 ஏசா 57:14-16 நியா 7:11 யோபு 4:3 யோபு 4:4 யோபு 16:5 லூக் 22:32 லூக் 22:43 அப் 18:23 எபிரெ 12:12
4மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.ஏசா 28:16 ஏசா 32:4 சங் 116:11 ஆபகூ 2:3
5அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.ஏசா 29:18 ஏசா 32:3 ஏசா 32:4 ஏசா 42:6 ஏசா 42:7 ஏசா 42:16 ஏசா 43:8 சங் 146:8 மத் 9:27-30 மத் 11:3-5 மத் 12:22 மத் 20:30-34 மத் 21:14 மாற் 8:22-25 லூக் 4:18 யோவா 9:1-7 யோவா 9:39-7 யோவா 11:37 அப் 9:17 அப் 9:18 அப் 26:18 எபே 1:17 எபே 1:18 எபே 5:14
6அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.மத் 11:5 மத் 15:30 மத் 15:31 மத் 21:14 யோவா 5:8 யோவா 5:9 அப் 3:2 அப் 3:6-8 அப் 8:7 அப் 14:8-10
7வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.ஏசா 29:17 ஏசா 44:3 ஏசா 44:4 மத் 21:43 லூக் 13:29 யோவா 4:14 யோவா 7:38 1கொரி 6:9-11
8அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.ஏசா 11:16 ஏசா 19:23 ஏசா 40:3 ஏசா 40:4 ஏசா 42:16 ஏசா 49:11 ஏசா 49:12 ஏசா 57:14 ஏசா 62:10 எரே 31:21 யோவா 14:6 எபிரெ 10:20-23
9அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.ஏசா 11:6-9 ஏசா 65:25 லேவி 26:6 எசே 34:25 ஓசி 2:18 வெளிப் 20:1-3
10கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.ஏசா 51:10 ஏசா 51:11 மத் 20:28 1தீமோ 2:6
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.