| 1 | என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்; | நீதி 2:1 நீதி 4:1 நீதி 4:20 மத் 3:9 மாற் 4:23 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 |
| 2 | அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். | நீதி 10:21 நீதி 15:2 நீதி 15:7 நீதி 16:23 நீதி 20:15 சங் 45:2 சங் 71:15 சங் 119:13 உன்ன 4:11 மல்கி 2:6 மல்கி 2:7 |
| 3 | பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். | நீதி 2:16 நீதி 6:24 நீதி 7:21 வெளிப் 17:2-6 |
| 4 | அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும். | நீதி 6:24-35 நீதி 7:22 நீதி 7:23 நீதி 9:18 நீதி 23:27 நீதி 23:28 பிரச 7:26 எபிரெ 12:15 எபிரெ 12:16 |
| 5 | அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். | நீதி 2:18 நீதி 2:19 நீதி 7:27 |
| 6 | நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடி.யாது. | நீதி 4:26 சங் 119:59 |
| 7 | ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள். | நீதி 4:1 நீதி 8:32-36 நீதி 22:17-21 எபிரெ 12:25 |
| 8 | உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே. | நீதி 4:15 நீதி 6:27 நீதி 6:28 மத் 6:13 எபே 5:11 |
| 9 | சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். | நீதி 6:29-35 ஆதி 38:23-26 நியா 16:19-21 நெகே 13:26 ஓசி 4:13 ஓசி 4:14 |
| 10 | அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். | நீதி 6:35 ஓசி 7:9 லூக் 15:30 |
| 11 | முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: | நீதி 7:23 உபா 32:29 எரே 5:31 ரோம 6:21 எபிரெ 13:4 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 12 | ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் பண்ணினதே! | நீதி 1:7 நீதி 1:22 நீதி 1:29 நீதி 1:30 நீதி 15:5 சங் 50:17 சங் 73:22 சகரி 7:11-14 யோவா 3:19 யோவா 3:20 |
| 13 | என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே! | லூக் 15:18 1தெச 4:8 1தெச 5:12 1தெச 5:13 எபிரெ 13:7 |
| 14 | சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய். | நீதி 13:20 எண் 25:1-6 ஓசி 4:11-14 1கொரி 10:6-8 2பேது 2:10-18 யூதா 1:7-13 |
| 15 | உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு. | நீதி 5:18 நீதி 5:19 1கொரி 7:2-5 எபிரெ 13:4 |
| 16 | உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. | உபா 33:28 சங் 68:26 ஏசா 48:21 |
| 17 | அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. |
| 18 | உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. | பிரச 9:9 மல்கி 2:14 மல்கி 2:15 |
| 19 | அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. | உன்ன 2:9 உன்ன 4:5 உன்ன 7:3 உன்ன 8:14 |
| 20 | என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? | நீதி 2:16-19 நீதி 6:24 நீதி 7:5 நீதி 22:14 நீதி 23:27 நீதி 23:28 நீதி 23:33 1இரா 11:1 |
| 21 | மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். | நீதி 15:3 2நாளா 16:9 யோபு 31:4 யோபு 34:21 சங் 11:4 சங் 17:3 சங் 139:1-12 எரே 16:17 எரே 17:10 எரே 23:24 எரே 32:19 ஓசி 7:2 எபிரெ 4:13 வெளிப் 2:18 வெளிப் 2:23 |
| 22 | துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். | நீதி 1:18 நீதி 1:31 நீதி 11:3 நீதி 11:5 சங் 7:15 சங் 7:16 சங் 9:15 எரே 2:19 ஓசி 4:11-14 கலா 6:7 கலா 6:8 |
| 23 | அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான். | நீதி 10:21 நீதி 14:32 யோபு 4:21 யோபு 36:12 |