| 1 | நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே. | சங் 95:7 ஏசா 56:12 லூக் 12:19 லூக் 12:20 2கொரி 6:2 யாக் 4:13-16 |
| 2 | உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். | நீதி 25:27 2கொரி 10:12 2கொரி 10:18 2கொரி 12:11 |
| 3 | கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம். | நீதி 17:12 ஆதி 34:25 ஆதி 34:26 ஆதி 49:7 1சாமு 22:18 1சாமு 22:19 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 தானி 3:19 1யோவா 3:12 |
| 4 | உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? | யாக் 1:19-21 |
| 5 | மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. | நீதி 28:23 லேவி 19:17 மத் 18:15 கலா 2:14 1தீமோ 5:20 |
| 6 | சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். | 2சாமு 12:7-15 யோபு 5:17 யோபு 5:18 சங் 141:5 எபிரெ 12:10 வெளிப் 3:19 |
| 7 | திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும். | எண் 11:4-9 எண் 11:18-20 எண் 21:5 |
| 8 | தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான். | யோபு 39:14-16 ஏசா 16:2 |
| 9 | பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். | நீதி 7:17 நியா 9:9 சங் 45:7 சங் 45:8 சங் 104:15 சங் 133:2 உன்ன 1:3 உன்ன 3:6 உன்ன 4:10 யோவா 12:3 2கொரி 2:15 2கொரி 2:16 |
| 10 | உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துகாலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி. | 2சாமு 19:24 2சாமு 19:28 2சாமு 21:7 1இரா 12:6-8 2நாளா 24:22 ஏசா 41:8-10 எரே 2:5 |
| 11 | என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து. | நீதி 10:1 நீதி 15:20 நீதி 23:15 நீதி 23:16 நீதி 23:24 நீதி 23:25 பிரச 2:18-21 பிலேமோ 1:7 பிலேமோ 1:19 பிலேமோ 1:20 2யோவா 1:4 |
| 12 | விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். | நீதி 18:10 நீதி 22:3 யாத் 9:20 யாத் 9:21 சங் 57:1-3 ஏசா 26:20 ஏசா 26:21 மத் 3:7 எபிரெ 6:18 எபிரெ 11:7 2பேது 3:7 2பேது 3:10-14 |
| 13 | அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள். | நீதி 6:1-4 நீதி 20:16 நீதி 22:26 நீதி 22:27 யாத் 22:26 |
| 14 | ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். | 2சாமு 15:2-7 2சாமு 16:16-19 2சாமு 17:7-13 1இரா 22:6 1இரா 22:13 எரே 28:2-4 அப் 12:22 அப் 12:23 |
| 15 | அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. | நீதி 19:13 நீதி 21:9 நீதி 21:19 நீதி 25:24 யோபு 14:19 |
| 16 | அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். | யோவா 12:3 |
| 17 | இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேதிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான். | 1சாமு 13:20 1சாமு 13:21 |
| 18 | அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். | உன்ன 8:12 1கொரி 9:7 1கொரி 9:13 |
| 19 | தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும். | யாக் 1:22-25 |
| 20 | பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை. | நீதி 30:15 நீதி 30:16 ஆபகூ 2:5 |
| 21 | வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. | நீதி 17:3 சங் 12:6 சங் 66:10 சகரி 13:9 மல்கி 3:3 1பேது 1:7 1பேது 4:12 |
| 22 | மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. | நீதி 23:35 யாத் 12:30 யாத் 14:5 யாத் 15:9 2நாளா 28:22 2நாளா 28:23 ஏசா 1:5 எரே 5:3 எரே 44:15 எரே 44:16 வெளிப் 16:10 வெளிப் 16:11 |
| 23 | உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு. | ஆதி 31:38-40 ஆதி 33:13 1சாமு 17:28 1நாளா 27:29-31 2நாளா 26:10 எசே 34:22-24 எசே 34:31-24 யோவா 21:15-17 1பேது 5:2 |
| 24 | செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? | நீதி 23:5 செப் 1:18 1தீமோ 6:17 1தீமோ 6:18 |
| 25 | புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும். | நீதி 10:5 சங் 104:14 |
| 26 | ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும். | யோபு 31:20 |
| 27 | வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும். | நீதி 30:8 நீதி 30:9 மத் 6:33 |