| 1 | உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. | 1சாமு 12:17 1சாமு 12:18 |
| 2 | அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது. | எண் 23:8 உபா 23:4 உபா 23:5 1சாமு 14:28 1சாமு 14:29 1சாமு 17:43 2சாமு 16:12 நெகே 13:2 சங் 109:28 |
| 3 | குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. | நீதி 10:13 நீதி 17:10 நீதி 19:25 நீதி 27:22 நியா 8:5-7 சங் 32:9 1கொரி 4:21 2கொரி 10:6 2கொரி 13:2 |
| 4 | மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். | நீதி 17:14 நியா 12:1-6 2சாமு 19:41-43 1இரா 12:14 1இரா 12:16 2இரா 14:8-10 1பேது 2:21-23 1பேது 3:9 யூதா 1:9 |
| 5 | மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். | 1இரா 22:24-28 எரே 36:17 எரே 36:18 மத் 15:1-3 மத் 16:1-4 மத் 21:23-27 மத் 22:15-32 லூக் 12:13-21 லூக் 13:23-30 யோவா 8:7 யோவா 9:26-33 தீத் 1:13 |
| 6 | மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். | நீதி 10:26 நீதி 13:17 நீதி 25:13 எண் 13:31 |
| 7 | நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். | நீதி 26:9 நீதி 17:7 சங் 50:16-21 சங் 64:8 மத் 7:4 மத் 7:5 லூக் 4:23 |
| 8 | மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான். | நீதி 26:1 நீதி 19:10 நீதி 30:22 |
| 9 | மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. | நீதி 23:35 |
| 10 | பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான். | நீதி 11:31 ரோம 2:6 |
| 11 | நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான். | யாத் 8:15 மத் 12:45 2பேது 2:22 |
| 12 | தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம். | நீதி 22:29 நீதி 29:20 மத் 21:31 லூக் 7:44 |
| 13 | வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். | நீதி 15:19 நீதி 19:15 நீதி 22:13 |
| 14 | கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். | நீதி 6:9 நீதி 6:10 நீதி 12:24 நீதி 12:27 நீதி 24:33 எபிரெ 6:12 |
| 15 | சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். | நீதி 19:24 |
| 16 | புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். | நீதி 26:12 நீதி 12:15 1பேது 3:15 |
| 17 | வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான். | நீதி 17:11 நீதி 18:6 நீதி 20:3 லூக் 12:14 2தீமோ 2:23 2தீமோ 2:24 |
| 18 | கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, | நீதி 7:23 நீதி 25:18 ஆதி 49:23 |
| 19 | அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான். | நீதி 10:23 நீதி 14:9 நீதி 15:21 எபே 5:4 2பேது 2:13 |
| 20 | விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். | நீதி 26:22 நீதி 16:28 நீதி 22:10 யாக் 3:6 |
| 21 | கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். | நீதி 10:12 நீதி 15:18 நீதி 29:22 நீதி 30:33 2சாமு 20:1 1இரா 12:2 1இரா 12:3 1இரா 12:20 சங் 120:4 |
| 22 | கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். | நீதி 18:8 நீதி 20:19 எசே 22:9 |
| 23 | நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும். | நீதி 10:18 2சாமு 20:9 2சாமு 20:10 எசே 33:31 லூக் 22:47 லூக் 22:48 |
| 24 | பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான். | நீதி 11:1 நீதி 12:5 நீதி 12:17 நீதி 12:20 நீதி 14:8 |
| 25 | அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. | சங் 12:2 சங் 28:3 எரே 9:2-8 மீகா 7:5 |
| 26 | பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். | ஆதி 4:8 1சாமு 18:17 1சாமு 18:21 2சாமு 3:27-30 2சாமு 13:22-28 சங் 55:21-23 |
| 27 | படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். | நீதி 28:10 எஸ்தர் 7:10 சங் 7:15 சங் 7:16 சங் 9:15 சங் 10:2 சங் 57:6 பிரச 10:8 |
| 28 | கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும். | யோவா 8:40 யோவா 8:44-49 யோவா 10:32 யோவா 10:33 யோவா 15:22-24 |