| 1 | யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: | நீதி 1:1 நீதி 10:1 1இரா 4:32 பிரச 12:9 |
| 2 | காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. | உபா 29:29 யோபு 11:7 யோபு 11:8 யோபு 38:4-41 யோபு 39:1-30 யோபு 40:2 யோபு 42:3 ரோம 11:33 ரோம 11:34 |
| 3 | வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. | சங் 103:11 ஏசா 7:11 ஏசா 55:9 ரோம 8:39 |
| 4 | வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். | நீதி 17:3 ஏசா 1:25-27 மல்கி 3:3 2தீமோ 2:20 2தீமோ 2:21 1பேது 1:7 |
| 5 | ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். | நீதி 20:8 1இரா 2:33 1இரா 2:46 எஸ்தர் 7:10 எஸ்தர் 8:11-17 சங் 101:7 சங் 101:8 |
| 6 | ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. | நீதி 25:27 நீதி 27:2 |
| 7 | உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. | நீதி 16:19 லூக் 14:8-10 |
| 8 | வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. | நீதி 17:14 நீதி 18:6 நீதி 30:33 2சாமு 2:14-16 2சாமு 2:26-16 2இரா 14:8-12 லூக் 14:31 லூக் 14:32 |
| 9 | நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. | மத் 18:5-17 |
| 10 | மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது. | சங் 119:39 |
| 11 | ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். | நீதி 15:23 நீதி 24:26 பிரச 12:10 ஏசா 50:4 |
| 12 | கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி. | யோபு 42:11 |
| 13 | கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான். | நீதி 25:25 நீதி 13:17 நீதி 26:6 பிலிப் 2:25-30 |
| 14 | கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி. | நீதி 20:6 1இரா 22:11 லூக் 14:11 லூக் 18:10-14 2கொரி 11:13-18 2கொரி 11:31-18 2பேது 2:15-19 யூதா 1:12 யூதா 1:13 யூதா 1:16 |
| 15 | நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். | நீதி 15:1 நீதி 16:14 ஆதி 32:4-21 1சாமு 25:14 1சாமு 25:24-44 பிரச 10:4 |
| 16 | தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். | நீதி 24:13 நீதி 24:14 நியா 14:8 நியா 14:9 1சாமு 14:25-27 ஏசா 7:15 ஏசா 7:22 |
| 17 | உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே. | ஆதி 19:2 ஆதி 19:3 நியா 19:18-21 |
| 18 | பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன். | நீதி 12:18 சங் 52:2 சங் 55:21 சங் 57:4 சங் 120:3 சங் 120:4 சங் 140:3 எரே 9:3 எரே 9:8 யாக் 3:6 |
| 19 | ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம். | 2நாளா 28:20 2நாளா 28:21 யோபு 6:14-20 ஏசா 30:1-3 ஏசா 36:6 எசே 29:6 எசே 29:7 2தீமோ 4:16 |
| 20 | மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான். | உபா 24:12-17 யோபு 24:7-10 ஏசா 58:7 யாக் 2:15 யாக் 2:16 |
| 21 | உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. | நீதி 24:17 யாத் 23:4 யாத் 23:5 மத் 5:44 லூக் 10:33-36 ரோம 12:20 ரோம 12:21 |
| 22 | அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். | 2சாமு 16:12 மத் 10:13 1கொரி 15:18 |
| 23 | வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். | யோபு 37:22 |
| 24 | சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். | நீதி 19:13 நீதி 21:9 நீதி 21:19 நீதி 27:15 நீதி 27:16 |
| 25 | தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம். | ஆதி 21:16-19 யாத் 17:2 யாத் 17:3 யாத் 17:6 நியா 15:18 நியா 15:19 2சாமு 23:15 சங் 42:1 சங் 42:2 சங் 63:1 ஏசா 55:1 எரே 18:14 யோவா 7:37 வெளிப் 21:6 வெளிப் 22:17 |
| 26 | துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும். | ஆதி 4:8 1சாமு 22:14-18 2நாளா 24:21 2நாளா 24:22 மத் 23:34-37 மத் 26:69-74 அப் 7:52 1தெச 2:15 வெளிப் 17:6 |
| 27 | தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல. | நீதி 27:2 யோவா 5:44 2கொரி 12:1 2கொரி 12:11 பிலிப் 2:3 |
| 28 | தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான். | நீதி 16:32 நீதி 22:24 1சாமு 20:30 1சாமு 25:17 |