| 1 | ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். | சங் 46:1 சங் 48:1 |
| 2 | பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். | சங் 62:9 1சாமு 2:7 1சாமு 2:8 யோபு 34:19 நீதி 22:2 எரே 5:4 எரே 5:5 யாக் 1:9-11 யாக் 2:1-7 வெளிப் 6:15-17 |
| 3 | என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். | உபா 32:2 யோபு 33:3 யோபு 33:33 நீதி 4:1 நீதி 4:2 நீதி 8:6-11 நீதி 22:17 நீதி 22:20 நீதி 22:21 2தீமோ 3:15-17 |
| 4 | என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். | சங் 78:2 மத் 13:35 |
| 5 | என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந்தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? | சங் 27:1 சங் 27:2 சங் 46:1 சங் 46:2 ஏசா 41:10 ஏசா 41:11 அப் 27:24 ரோம 8:33 ரோம 8:34 பிலிப் 1:28 |
| 6 | தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, | சங் 52:7 சங் 62:10 யோபு 31:24 யோபு 31:25 நீதி 10:15 நீதி 23:5 மாற் 10:24 1தீமோ 6:17 |
| 7 | ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, | மத் 16:26 மத் 20:28 1தீமோ 2:6 1பேது 1:18 |
| 8 | எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. | யோபு 36:18 யோபு 36:19 |
| 9 | அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது. | சங் 89:48 நீதி 10:2 நீதி 11:4 பிரச 8:8 சகரி 1:5 லூக் 16:22 லூக் 16:23 |
| 10 | ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். | பிரச 2:16-21 பிரச 9:1 பிரச 9:2 ரோம 5:12-14 எபிரெ 9:27 |
| 11 | தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். | சங் 5:9 சங் 64:6 எசே 38:10 லூக் 11:39 அப் 8:22 |
| 12 | ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். | சங் 49:20 சங் 39:5 சங் 82:7 யாக் 1:10 யாக் 1:11 1பேது 1:24 |
| 13 | இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா) | லூக் 12:20 1கொரி 3:19 |
| 14 | ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். | சங் 44:11 எரே 12:3 ரோம 8:36 |
| 15 | ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) | சங் 31:5 சங் 56:13 சங் 73:24 ஓசி 13:14 வெளிப் 5:9 வெளிப் 14:13 |
| 16 | ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. | சங் 49:5 சங் 37:1 சங் 37:7 எஸ்தர் 3:1-6 நீதி 28:12 |
| 17 | அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. | யோபு 1:21 யோபு 27:19 பிரச 5:15 லூக் 12:20 லூக் 16:24 1தீமோ 6:7 |
| 18 | அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழந்தாலும், | உபா 29:19 ஓசி 12:8 லூக் 12:19 |
| 19 | அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். | பிரச 3:21 பிரச 12:7 லூக் 12:20 லூக் 16:22 லூக் 16:23 |
| 20 | கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். | சங் 49:12 எஸ்தர் 5:11-14 எஸ்தர் 7:10 |