| 1 | கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். | 2நாளா 20:1-37 சங் 30:1 |
| 2 | வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். | சங் 50:2 எரே 3:19 புலம் 2:15 தானி 8:9 தானி 11:16 |
| 3 | அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். | சங் 76:1-5 சங் 125:1 2நாளா 12:7 2நாளா 14:9-15 2நாளா 20:1-37 ஏசா 4:5 ஏசா 4:6 ஏசா 37:33-36 சகரி 2:4 சகரி 2:5 |
| 4 | இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். | சங் 83:2-8 2சாமு 10:6 2சாமு 10:14 2சாமு 10:16-19 ஏசா 7:1 ஏசா 8:8-10 ஏசா 10:8 ஏசா 29:5-8 வெளிப் 17:12-14 வெளிப் 19:20 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
| 5 | அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். | யாத் 14:25 2இரா 7:6 2இரா 7:7 2இரா 19:35-37 |
| 6 | அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள். | யாத் 15:15 யாத் 15:16 ஏசா 13:6-8 தானி 5:6 |
| 7 | கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். | எசே 27:25 எசே 27:26 |
| 8 | நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா) | சங் 44:1 சங் 44:2 சங் 78:3-6 ஏசா 38:19 |
| 9 | தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். | சங் 26:3 சங் 77:10 சங் 77:11 சங் 104:34 சங் 105:5 சங் 105:6 |
| 10 | தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. | சங் 113:3 சங் 138:2-4 யாத் 3:13-15 யாத் 34:5-7 உபா 28:58 யோசு 7:9 மல்கி 1:11 மல்கி 1:14 |
| 11 | உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக. | சங் 97:8 உன்ன 1:5 உன்ன 2:7 உன்ன 3:5 உன்ன 5:16 ஏசா 37:22 சகரி 9:9 லூக் 23:28 |
| 12 | சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். | நெகே 12:31-40 மத் 24:1 மத் 24:2 |
| 13 | பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள். | ஏசா 58:12 ஆமோ 9:11 அப் 15:14-16 |
| 14 | இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார். | சங் 16:2 சங் 31:14 சங் 73:24 சங் 73:26 புலம் 3:21 |