இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 38

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.சங் 70:1
2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.சங் 21:12 சங் 64:7 யோபு 6:4 புலம் 3:12
3உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.சங் 31:9 2நாளா 26:19 யோபு 2:7 யோபு 2:8 யோபு 33:19-22 ஏசா 1:5 ஏசா 1:6
4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.சங் 40:12 எஸ்றா 9:6
5என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.சங் 38:7 சங் 32:3 ஏசா 1:5 ஏசா 1:6 எரே 8:22
6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.சங் 35:14 சங் 42:5 சங் 57:6 சங் 145:14
7என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.சங் 41:8 2நாளா 21:18 2நாளா 21:19 யோபு 7:5 யோபு 30:18 அப் 12:23
8நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.சங் 22:1 சங் 22:2 சங் 32:3 யோபு 3:24 யோபு 30:28 ஏசா 59:11
9ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.சங் 102:5 சங் 102:20 யோவா 1:48 ரோம 8:22 ரோம 8:23 ரோம 8:26 ரோம 8:27 2கொரி 5:2
10என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.சங் 42:1 சங் 119:81-83 சங் 143:4-7 ஏசா 21:4
11என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.சங் 31:11 யோபு 6:21-23 யோபு 19:13-17 மத் 26:56 யோவா 16:32
12என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.சங் 10:9 சங் 64:2-5 சங் 119:110 சங் 140:5 சங் 141:9 2சாமு 17:1-3 லூக் 20:19 லூக் 20:20
13நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறவாதவனாகவும் இருக்கிறேன்.சங் 39:2 சங் 39:9 2சாமு 16:10-12 ஏசா 53:7 1பேது 2:23
14காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப் போலானேன்.ஆமோ 5:13 மீகா 7:5 மாற் 15:3-5 யோவா 8:6
15கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.சங் 39:7 சங் 123:1-3
16அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.சங் 13:3 சங் 13:4 சங் 35:24-26
17நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.சங் 35:15 மீகா 4:6 மீகா 4:7
18என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.சங் 32:5 சங் 51:3 யோபு 31:33 யோபு 33:27 நீதி 28:13
19என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.சங் 3:1 சங் 25:19 சங் 56:1 சங் 56:2 சங் 59:1-3
20நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.சங் 7:4 சங் 35:12 சங் 109:3-5 1சாமு 19:4-6 1சாமு 23:5 1சாமு 23:12 1சாமு 25:16 1சாமு 25:21 எரே 18:20
21கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.சங் 22:1 சங் 22:11 சங் 22:19 சங் 22:24 சங் 35:21 சங் 35:22
22என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.சங் 40:13 சங் 40:17 சங் 70:1 சங் 70:5 சங் 71:12 சங் 141:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.