| 1 | என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். | சங் 62:1 சங் 77:1 1நாளா 16:41 1நாளா 25:1-6 |
| 2 | நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; | சங் 38:13 சங் 38:14 ஏசா 53:7 மத் 27:12-14 |
| 3 | என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன். | எரே 20:9 எசே 3:14 லூக் 24:32 |
| 4 | கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என்முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். | சங் 90:12 சங் 119:84 யோபு 14:13 |
| 5 | இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) | சங் 90:4 சங் 90:5 சங் 90:9 சங் 90:10 ஆதி 47:9 யோபு 7:6 யோபு 9:25 யோபு 9:26 யோபு 14:1 யோபு 14:2 யாக் 4:14 |
| 6 | வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான். | 1கொரி 7:31 யாக் 4:14 |
| 7 | இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை. | சங் 130:5 சங் 130:6 ஆதி 49:18 லூக் 2:25 |
| 8 | என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். | சங் 25:11 சங் 25:18 சங் 51:7-10 சங் 51:14-10 சங் 65:3 சங் 130:8 மீகா 7:19 மத் 1:21 தீத் 2:14 |
| 9 | நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன். | சங் 38:13 லேவி 10:3 1சாமு 3:18 2சாமு 16:10 யோபு 1:21 யோபு 2:10 யோபு 40:4 யோபு 40:5 தானி 4:35 |
| 10 | என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். | சங் 25:16 சங் 25:17 1சாமு 6:5 யோபு 9:34 யோபு 13:21 |
| 11 | அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா) | சங் 38:1-8 சங் 90:7-10 1கொரி 5:5 1கொரி 11:30-32 எபிரெ 12:6 வெளிப் 3:19 |
| 12 | கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன். | சங் 56:8 சங் 116:3 2சாமு 16:12 2இரா 20:5 யோபு 16:20 எபிரெ 5:7 |
| 13 | நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும். | யோபு 10:20 யோபு 10:21 யோபு 14:5 யோபு 14:6 |