இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 14

                   
புத்தகங்களைக் காட்டு
1'தேவன் இல்லை' என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.சங் 73:3 சங் 92:6 சங் 107:17 1சாமு 25:25 நீதி 1:7 நீதி 1:22 நீதி 13:19 நீதி 27:22 லூக் 12:20
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.சங் 33:13 சங் 33:14 சங் 102:19 சங் 102:20 ஆதி 6:12 ஆதி 11:5 ஆதி 18:21 ஏசா 63:15 ஏசா 64:1 புலம் 3:50
3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.சங் 119:176 பிரச 7:29 ஏசா 53:6 ஏசா 59:7 ஏசா 59:8 ஏசா 59:13-15 எரே 2:13 ரோம 3:10-12 ரோம 3:23-12 எபே 2:3 2பேது 2:13-15
4அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.சங் 94:8 சங் 94:9 ஏசா 5:13 ஏசா 27:11 ஏசா 29:14 ஏசா 44:19 ஏசா 44:20 ஏசா 45:20 ரோம 1:21 ரோம 1:22 ரோம 1:28 2கொரி 4:3 2கொரி 4:4 எபே 4:17 எபே 4:18
5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.சங் 53:5 யாத் 15:16 எஸ்தர் 8:7 நீதி 1:26 நீதி 1:27 நீதி 28:1
6சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.சங் 3:2 சங் 4:2 சங் 22:7 சங் 22:8 சங் 42:10 நெகே 4:2-4 ஏசா 37:10 ஏசா 37:11 எசே 35:10 தானி 3:15 மத் 27:40-43
7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.சங் 53:6
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.