இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் இல்லை.சங் 6:1 1நாளா 15:21
2அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.சங் 10:7 சங் 36:3 சங் 36:4 சங் 38:12 சங் 41:6 சங் 52:1-4 சங் 59:12 சங் 144:8 சங் 144:11 எரே 9:2-6 எரே 9:8-6
3இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக.யோபு 32:22
4அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.எரே 18:18 யாக் 3:5 யாக் 3:6
5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.சங் 10:12 சங் 74:21 சங் 74:22 சங் 79:10 சங் 79:11 சங் 146:7 சங் 146:8 யாத் 2:23 யாத் 2:24 யாத் 3:7-9 நியா 10:16 நீதி 14:31 நீதி 22:22 நீதி 22:23 பிரச 4:1 பிரச 5:8 ஏசா 19:20 எசே 18:12 எசே 18:13 எசே 18:18 யாக் 5:4
6கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன.சங் 18:30 சங் 19:8 சங் 119:140 2சாமு 22:31 நீதி 30:5
7கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.சங் 16:1 சங் 37:28 சங் 37:40 சங் 121:8 சங் 145:20 உபா 33:3 1சாமு 2:9 ஏசா 27:3 1பேது 1:5 யூதா 1:1
8மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.நீதி 29:12 ஓசி 5:11 மீகா 6:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.