| 1 | இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் இல்லை. | சங் 6:1 1நாளா 15:21 |
| 2 | அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள். | சங் 10:7 சங் 36:3 சங் 36:4 சங் 38:12 சங் 41:6 சங் 52:1-4 சங் 59:12 சங் 144:8 சங் 144:11 எரே 9:2-6 எரே 9:8-6 |
| 3 | இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக. | யோபு 32:22 |
| 4 | அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். | எரே 18:18 யாக் 3:5 யாக் 3:6 |
| 5 | ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | சங் 10:12 சங் 74:21 சங் 74:22 சங் 79:10 சங் 79:11 சங் 146:7 சங் 146:8 யாத் 2:23 யாத் 2:24 யாத் 3:7-9 நியா 10:16 நீதி 14:31 நீதி 22:22 நீதி 22:23 பிரச 4:1 பிரச 5:8 ஏசா 19:20 எசே 18:12 எசே 18:13 எசே 18:18 யாக் 5:4 |
| 6 | கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன. | சங் 18:30 சங் 19:8 சங் 119:140 2சாமு 22:31 நீதி 30:5 |
| 7 | கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். | சங் 16:1 சங் 37:28 சங் 37:40 சங் 121:8 சங் 145:20 உபா 33:3 1சாமு 2:9 ஏசா 27:3 1பேது 1:5 யூதா 1:1 |
| 8 | மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள். | நீதி 29:12 ஓசி 5:11 மீகா 6:16 |