இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 11

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் கர்த்தரிடத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி, 'பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ' என்று சொல்லுகிறீர்கள்.சங் 7:1 சங் 9:10 சங் 16:1 சங் 25:2 சங் 31:14 சங் 56:11 2நாளா 14:11 2நாளா 16:8 ஏசா 26:3 ஏசா 26:4
2இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.சங் 10:2 சங் 37:14 சங் 64:3 சங் 64:4 எரே 9:3
3அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே, நீதிமான் என்னசெய்வான்?சங் 75:3 சங் 82:5 ஏசா 58:12 2தீமோ 2:19
4கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.சங் 9:11 சங் 18:6 யாத் 40:34 யாத் 40:35 1நாளா 17:5 ஆபகூ 2:20 சகரி 2:13 2தெச 2:4
5கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.சங் 7:9 சங் 17:3 சங் 26:2 சங் 139:1 சங் 139:23 சங் 139:24 ஆதி 22:1 சகரி 13:9 மல்கி 3:3 யாக் 1:12 1பேது 1:7 1பேது 4:12
6துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.சங் 105:32 ஆதி 19:24 யாத் 9:23 யாத் 9:24 யோபு 18:15 யோபு 20:23 ஏசா 24:17 ஏசா 24:18 எசே 13:13 எசே 38:22 லூக் 17:29
7கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.சங் 45:7 சங் 99:4 சங் 146:8 ஏசா 61:8
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.