| 1 | கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? | சங் 22:1 சங் 46:1 எரே 14:8 |
| 2 | துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். | சங் 31:18 சங் 36:11 சங் 59:12 சங் 119:5 சங் 119:69 சங் 119:85 சங் 119:122 சங் 140:5 யாத் 9:17 யாத் 18:11 ஏசா 10:12 ஏசா 10:13 ஏசா 14:13 ஏசா 14:16 எரே 43:2 |
| 3 | துன்மார்க்கன் தன் உள்ளத்தின் இச்சையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் கர்த்தரைச் சபித்து அசட்டைபண்ணுகிறான். | சங் 35:21 சங் 49:6 சங் 52:1 சங் 73:8 சங் 73:9 சங் 94:4 யாத் 15:9 ஏசா 10:7-11 ஏசா 37:23 யாக் 4:13 யாக் 4:16 |
| 4 | துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. | சங் 18:27 சங் 101:5 நீதி 6:17 நீதி 21:4 நீதி 30:13 ஏசா 2:11 ஏசா 3:9 |
| 5 | அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கின்றன; தன் எதிராளிகள் எல்லார்மேலும் சீறுகிறான். | ஆதி 6:12 நீதி 1:19 நீதி 2:13 நீதி 2:15 ஏசா 10:1 ஓசி 9:9 ரோம 3:16 |
| 6 | 'நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை' என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். | சங் 11:1 சங் 14:1 மத் 24:48 |
| 7 | அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. | சங் 59:12 சங் 62:4 ரோம 3:14 |
| 8 | கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன. | 1சாமு 22:18 1சாமு 23:23 2இரா 21:16 நீதி 1:11 நீதி 1:12 ஆபகூ 3:14 லூக் 8:1 லூக் 10:1 |
| 9 | தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். | சங் 17:12 சங் 59:3 மீகா 7:2 அப் 23:21 |
| 10 | திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான். | 1சாமு 2:36 |
| 11 | ' தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்' என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான். | சங் 10:6 மாற் 2:6 லூக் 7:39 |
| 12 | கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும். | சங் 3:7 சங் 7:6 சங் 9:19 |
| 13 | துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி, 'நீர் கேட்டு விசாரிப்பதில்லை' என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்? | சங் 74:10 சங் 74:18 எண் 11:20 2சாமு 12:9 2சாமு 12:10 லூக் 10:16 1தெச 4:8 |
| 14 | அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. | சங் 35:22 நீதி 15:3 எரே 16:17 எரே 23:24 எபிரெ 4:13 |
| 15 | துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்கம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும். | சங் 3:7 சங் 37:17 யோபு 38:15 எசே 30:21 எசே 30:22 சகரி 11:17 |
| 16 | கர்த்தர் சதாகாலங்களுக்கும் இராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள். | சங் 29:10 சங் 93:1 சங் 145:13 சங் 146:10 ஏசா 33:22 எரே 10:10 புலம் 5:19 தானி 4:34 தானி 6:26 1தீமோ 1:17 1தீமோ 6:15 1தீமோ 6:16 |
| 17 | கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர். | சங் 9:12 சங் 9:18 சங் 37:4 சங் 145:19 நீதி 10:24 |
| 18 | மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர். | சங் 10:14 சங் 72:4 சங் 82:3 சங் 94:1-6 ஏசா 11:4 லூக் 18:7 லூக் 18:8 |