| 1 | இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது. | யோபு 5:9-16 யோபு 12:9-25 யோபு 42:3-6 |
| 2 | நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. | யோபு 12:3 யோபு 15:8 யோபு 15:9 யோபு 34:35 யோபு 35:16 யோபு 37:2 யோபு 40:4 யோபு 40:5 யோபு 42:7 1கொரி 8:1 1கொரி 8:2 2கொரி 11:4 2கொரி 11:5 2கொரி 11:16-18 2கொரி 12:11 |
| 3 | சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். | யோபு 13:22 யோபு 9:34 யோபு 9:35 யோபு 11:5 யோபு 23:3-7 யோபு 31:35 |
| 4 | நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள். | யோபு 4:7-11 யோபு 5:1-5 யோபு 8:3 யோபு 8:4 யோபு 18:5-21 யோபு 21:27-34 யோபு 22:6-30 யாத் 20:16 சங் 119:69 |
| 5 | நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். | யோபு 13:13 யோபு 11:3 யோபு 16:3 யோபு 18:2 யோபு 19:2 யோபு 21:2 யோபு 21:3 யோபு 32:1 |
| 6 | நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். | யோபு 21:2 யோபு 21:3 யோபு 33:1-3 யோபு 34:2 நியா 9:7 நீதி 8:6 நீதி 8:7 |
| 7 | நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ? | யோபு 4:7 யோபு 11:2-4 யோபு 17:5 யோபு 32:21 யோபு 32:22 யோபு 36:4 யோவா 16:2 ரோம 3:5-8 2கொரி 4:2 |
| 8 | அவருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ? | யோபு 32:21 யோபு 34:19 யாத் 23:2 யாத் 23:3 நீதி 24:23 மல்கி 2:9 |
| 9 | அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம் பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ? | யோபு 34:36 சங் 44:21 சங் 139:23 எரே 17:10 |
| 10 | நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். | யோபு 42:7 யோபு 42:8 சங் 50:21 சங் 50:22 சங் 82:2 யாக் 2:9 |
| 11 | அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? | சங் 119:120 எரே 5:22 எரே 10:10 மத் 10:28 வெளிப் 15:3 வெளிப் 15:4 |
| 12 | உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம். | யோபு 18:17 யாத் 17:14 சங் 34:16 சங் 102:12 சங் 109:15 நீதி 10:7 ஏசா 26:14 |
| 13 | நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும். | யோபு 13:5 யோபு 7:11 யோபு 10:1 யோபு 21:3 |
| 14 | நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்? | யோபு 18:4 பிரச 4:5 ஏசா 9:20 ஏசா 49:26 |
| 15 | அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன். | யோபு 13:18 யோபு 19:25-28 யோபு 23:10 சங் 23:4 நீதி 14:32 ரோம 8:38 ரோம 8:39 |
| 16 | அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான். | யாத் 15:2 சங் 27:1 சங் 62:6 சங் 62:7 சங் 118:14 சங் 118:21 ஏசா 12:2 எரே 3:23 அப் 13:47 |
| 17 | என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள். | யோபு 13:6 யோபு 33:1 |
| 18 | இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன். | யோபு 16:21 யோபு 23:4 யோபு 40:7 |
| 19 | என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே. | யோபு 19:5 யோபு 33:5-7 யோபு 33:32-7 ஏசா 50:7 ஏசா 50:8 ரோம 8:33 |
| 20 | இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். | யோபு 9:34 யோபு 9:35 |
| 21 | உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக. | யோபு 10:20 யோபு 22:15-17 |
| 22 | நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும். | யோபு 9:32 யோபு 38:3 யோபு 40:4 யோபு 40:5 யோபு 42:3-6 |
| 23 | என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என்பாவத்தையும் எனக்கு உணர்த்தும். | யோபு 22:5 சங் 44:20 சங் 44:21 |
| 24 | நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்? | யோபு 10:2 யோபு 29:2 யோபு 29:3 உபா 32:20 சங் 10:1 சங் 13:1 சங் 44:24 சங் 77:6-9 சங் 88:14 ஏசா 8:17 |
| 25 | காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? | யோபு 14:3 1சாமு 24:14 ஏசா 17:13 மத் 12:20 |
| 26 | மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர். | யோபு 3:20 ரூத் 1:20 சங் 88:3-18 |
| 27 | என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர். | யோபு 33:11 2நாளா 16:10-12 நீதி 7:22 அப் 16:24 |
| 28 | இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம் போலவும் அழிந்து போவான். | யோபு 30:17-19 யோபு 30:29-19 யோபு 30:30-19 எண் 12:12 |