| 1 | பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். | வெளிப் 14:14 வெளிப் 4:1 வெளிப் 6:8 வெளிப் 15:5 எரே 1:11 எசே 1:4 எசே 2:9 எசே 8:7 எசே 10:1 எசே 10:9 எசே 44:4 தானி 12:5 ஆமோ 8:2 சகரி 4:2 |
| 2 | அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. | வெளிப் 10:4 வெளிப் 11:12 வெளிப் 11:15 வெளிப் 19:1-7 |
| 3 | அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. | வெளிப் 5:9 வெளிப் 15:3 சங் 33:3 சங் 40:3 சங் 96:1 சங் 98:1 சங் 144:9 சங் 149:1 ஏசா 42:10 |
| 4 | ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். | சங் 45:14 உன்ன 1:3 உன்ன 6:8 மத் 25:1 1கொரி 7:25 1கொரி 7:26 1கொரி 7:28 2கொரி 11:2 1தீமோ 4:3 |
| 5 | இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள். | சங் 32:2 சங் 34:13 சங் 55:11 நீதி 8:8 ஏசா 53:9 செப் 3:13 மத் 12:34 யோவா 1:47 1பேது 3:10 |
| 6 | பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, | வெளிப் 8:13 ஏசா 6:2 ஏசா 6:6 ஏசா 6:7 எசே 1:14 தானி 9:21 |
| 7 | மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான். | ஏசா 40:3 ஏசா 40:6 ஏசா 40:9 ஏசா 44:23 ஏசா 52:7 ஏசா 52:8 ஏசா 58:1 ஓசி 8:1 |
| 8 | வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். | வெளிப் 16:19 வெளிப் 17:5 வெளிப் 17:18 வெளிப் 18:2 வெளிப் 18:3 வெளிப் 18:10 வெளிப் 18:11 வெளிப் 18:18-21 ஏசா 21:9 எரே 51:7 எரே 51:8 எரே 51:64 |
| 9 | அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, | வெளிப் 14:6-8 எரே 44:4 |
| 10 | அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். | வெளிப் 16:19 வெளிப் 18:3 யோபு 21:20 சங் 11:6 சங் 60:3 சங் 75:8 ஏசா 29:9 ஏசா 51:17 ஏசா 51:21 ஏசா 51:22 எரே 25:15-17 எரே 25:27-17 எரே 51:57 |
| 11 | அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. | வெளிப் 18:18 வெளிப் 19:3 ஆதி 19:28 ஏசா 33:14 ஏசா 34:10 யோவே 2:30 லூக் 16:23 |
| 12 | தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். | வெளிப் 13:10 |
| 13 | பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று. | வெளிப் 11:15 வெளிப் 11:19 வெளிப் 16:17 மத் 3:17 |
| 14 | பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன். | வெளிப் 14:15 வெளிப் 14:16 வெளிப் 1:7 வெளிப் 10:1 வெளிப் 20:11 சங் 97:2 ஏசா 19:1 மத் 17:5 லூக் 21:27 |
| 15 | அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். | வெளிப் 16:17 |
| 16 | அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது. | வெளிப் 14:14 மத் 16:27 யோவா 5:22 யோவா 5:23 |
| 17 | பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். | வெளிப் 14:14 வெளிப் 14:15 வெளிப் 14:18 வெளிப் 15:5 வெளிப் 15:6 வெளிப் 16:1 |
| 18 | அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான். | வெளிப் 6:9 வெளிப் 6:10 |
| 19 | அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்; | வெளிப் 19:15-21 உபா 32:32 உபா 32:33 |
| 20 | நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது. | ஏசா 63:1-3 புலம் 1:15 |