| 1 | சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. | மத் 24:3 மத் 24:36 மாற் 13:30-32 அப் 1:7 |
| 2 | இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். | எரே 23:20 |
| 3 | சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. | உபா 29:19 நியா 18:27 நியா 18:28 சங் 10:11-13 ஏசா 21:4 ஏசா 56:12 தானி 5:3-6 நாகூ 1:10 மத் 24:37-39 லூக் 17:26-30 லூக் 21:34 லூக் 21:35 |
| 4 | சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. | ரோம 13:11-13 கொலோ 1:13 1பேது 2:9 1பேது 2:10 1யோவா 2:8 |
| 5 | நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. | லூக் 16:8 யோவா 12:36 அப் 26:18 எபே 5:8 |
| 6 | ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். | நீதி 19:15 ஏசா 56:10 யோனா 1:6 மத் 13:25 மத் 25:5 மாற் 14:37 லூக் 22:46 ரோம 13:11-14 1கொரி 15:34 எபே 5:14 |
| 7 | தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். | யோபு 4:13 யோபு 33:15 லூக் 21:34 லூக் 21:35 ரோம 13:13 1கொரி 15:34 எபே 5:14 |
| 8 | பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். | 1தெச 5:5 ரோம 13:13 எபே 5:8 எபே 5:9 1பேது 2:9 1யோவா 1:7 |
| 9 | தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். | 1தெச 1:10 1தெச 3:3 யாத் 9:16 நீதி 16:4 எசே 38:10-17 மத் 26:24 அப் 1:20 அப் 1:25 அப் 13:48 ரோம 9:11-23 2தீமோ 2:19 2தீமோ 2:20 1பேது 2:8 2பேது 2:3 யூதா 1:4 |
| 10 | நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே. | மத் 20:28 யோவா 10:11 யோவா 10:15 யோவா 10:17 யோவா 15:13 ரோம 5:6-8 ரோம 8:34 ரோம 14:8 ரோம 14:9 1கொரி 15:3 2கொரி 5:15 2கொரி 5:21 எபே 5:2 1தீமோ 2:6 தீத் 2:14 1பேது 2:24 1பேது 3:18 |
| 11 | ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். | 1தெச 4:18 |
| 12 | அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, | 1கொரி 16:18 பிலிப் 2:19 எபிரெ 13:7 எபிரெ 13:17 |
| 13 | அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள். | மத் 10:40 1கொரி 4:1 1கொரி 4:2 1கொரி 9:7-11 கலா 4:14 கலா 6:6 |
| 14 | மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். | ரோம 12:1 |
| 15 | ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள். | ஆதி 45:24 1கொரி 16:10 எபே 5:15 எபே 5:33 1பேது 1:22 வெளிப் 19:10 வெளிப் 22:9 |
| 16 | எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். | 2கொரி 6:10 பிலிப் 4:4 மத் 5:12 லூக் 10:20 ரோம 12:12 |
| 17 | இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். | லூக் 18:1 லூக் 21:36 ரோம 12:12 எபே 6:18 கொலோ 4:2 1பேது 4:7 |
| 18 | எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. | எபே 5:20 பிலிப் 4:6 கொலோ 3:17 யோபு 1:21 சங் 34:1 எபிரெ 13:15 |
| 19 | ஆவியை அவித்துப்போடாதிருங்கள். | உன்ன 8:7 எபே 4:30 எபே 6:16 |
| 20 | தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். | 1தெச 4:8 எண் 11:25-29 1சாமு 10:5 1சாமு 10:6 1சாமு 10:10-13 1சாமு 19:20-24 அப் 19:6 1கொரி 11:4 1கொரி 12:10 1கொரி 12:28 1கொரி 13:2 1கொரி 13:9 1கொரி 14:1 1கொரி 14:3-6 1கொரி 14:22-25 1கொரி 14:29-32 1கொரி 14:37-39 எபே 4:11 எபே 4:12 வெளிப் 11:3-11 |
| 21 | எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். | ஏசா 8:20 மத் 7:15-20 மாற் 7:14-16 லூக் 12:57 அப் 17:11 ரோம 12:2 1கொரி 2:11 1கொரி 2:14 1கொரி 2:15 1கொரி 14:28 எபே 5:10 பிலிப் 1:10 1யோவா 4:1 வெளிப் 2:2 |
| 22 | பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள். | 1தெச 4:12 யாத் 23:7 ஏசா 33:15 மத் 17:26 மத் 17:27 ரோம 12:17 1கொரி 8:13 1கொரி 10:31-33 2கொரி 6:3 2கொரி 8:20 2கொரி 8:21 பிலிப் 4:8 யூதா 1:23 |
| 23 | சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. | ரோம 15:5 ரோம 15:13 ரோம 15:33 ரோம 16:20 1கொரி 14:33 2கொரி 5:19 பிலிப் 4:9 2தெச 3:16 எபிரெ 13:20 1பேது 5:10 |
| 24 | உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். | உபா 7:9 சங் 36:5 சங் 40:10 சங் 86:15 சங் 89:2 சங் 92:2 சங் 100:5 சங் 138:2 சங் 146:6 ஏசா 25:1 புலம் 3:23 மீகா 7:20 யோவா 1:17 யோவா 3:33 1கொரி 1:9 1கொரி 10:13 2தெச 3:3 2தீமோ 2:13 தீத் 1:2 எபிரெ 6:17 எபிரெ 6:18 |
| 25 | சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். | ரோம 15:30 2கொரி 1:11 எபே 6:18-20 பிலிப் 1:19 கொலோ 4:3 2தெச 3:1-3 பிலேமோ 1:22 எபிரெ 13:18 எபிரெ 13:19 |
| 26 | சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். | ரோம 16:16 1கொரி 16:20 |
| 27 | இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். | 1தெச 2:11 எண் 27:23 1இரா 22:16 2நாளா 18:15 மத் 26:63 மாற் 5:7 அப் 19:13 1தீமோ 1:3 1தீமோ 1:18 1தீமோ 5:7 1தீமோ 5:21 1தீமோ 6:13 1தீமோ 6:17 2தீமோ 4:1 |
| 28 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். | ரோம 1:7 ரோம 16:20 ரோம 16:24 2தெச 3:18 |