இணை வசன வேதாகமம்

Click to Subscribe

உபாகமம் 32

                   
புத்தகங்களைக் காட்டு
1வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.உபா 4:26 உபா 30:19 உபா 31:28 சங் 49:1 ஏசா 1:2 எரே 2:12 எரே 6:19 எரே 22:29
2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.2சாமு 23:4 யோபு 29:22 யோபு 29:23 சங் 72:6 ஏசா 55:10 ஏசா 55:11 ஓசி 6:4 ஓசி 14:5 1கொரி 3:6-8 எபிரெ 6:7
3கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.யாத் 3:13-16 யாத் 6:3 யாத் 20:24 யாத் 34:5-7 சங் 29:1 சங் 29:2 சங் 89:16-18 சங் 105:1-5 சங் 145:1-10 எரே 10:6 எரே 23:6 மத் 1:23 யோவா 17:6 யோவா 17:26
4அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.உபா 32:18 உபா 32:30 உபா 32:31 1சாமு 2:2 2சாமு 22:2 2சாமு 22:3 2சாமு 22:32 2சாமு 22:47 2சாமு 23:3 சங் 18:2 சங் 18:31 சங் 18:46 சங் 61:2-4 சங் 92:15 ஏசா 26:4 ஏசா 28:16 ஏசா 32:2 மத் 16:16-18 1கொரி 10:4 1பேது 2:6
5அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.உபா 4:16 உபா 31:29 ஆதி 6:12 யாத் 32:7 நியா 2:19 ஏசா 1:4 ஓசி 9:9 செப் 3:7 2கொரி 11:3
6விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?உபா 32:18 ஏசா 1:2 2கொரி 5:14 2கொரி 5:15 தீத் 2:11-14
7பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.சங் 44:1 சங் 77:5 சங் 119:52 ஏசா 63:11
8உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.எண் 24:16 சங் 7:17 சங் 50:14 சங் 82:6 சங் 91:1 சங் 92:8 ஏசா 14:14 தானி 4:17 தானி 5:18 அப் 7:48
9கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.உபா 26:18 உபா 26:19 யாத் 15:16 யாத் 19:5 யாத் 19:6 1சாமு 10:1 சங் 78:71 சங் 135:4 ஏசா 43:21 எரே 10:16 எரே 51:19 எபே 1:18 1பேது 2:9 1பேது 2:10
10பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.உபா 8:15 உபா 8:16 நெகே 9:19-21 சங் 107:4 சங் 107:5 உன்ன 8:5 எரே 2:6 ஓசி 13:5
11கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,யாத் 19:4 ஏசா 31:5 ஏசா 40:31 ஏசா 46:4 ஏசா 63:9 எபிரெ 11:3 வெளிப் 12:4
12கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.உபா 1:31 நெகே 9:12 சங் 27:11 சங் 78:14 சங் 78:52 சங் 78:53 சங் 80:1 சங் 136:16 ஏசா 46:4 ஏசா 63:9-13
13பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.உபா 33:26 உபா 33:29 ஏசா 58:14 எசே 36:2
14பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.ஆதி 18:8 நியா 5:25 2சாமு 17:29 யோபு 20:17 ஏசா 7:15 ஏசா 7:22
15யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.உபா 33:5 உபா 33:26 ஏசா 44:2
16அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.உபா 5:9 1இரா 14:22 நாகூ 1:1 நாகூ 1:2 1கொரி 10:22
17அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.லேவி 17:7 சங் 106:37 சங் 106:38 1கொரி 10:20 1தீமோ 4:1 வெளிப் 9:20
18உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.உபா 32:4 உபா 32:15 ஏசா 17:10
19கர்த்தர் அதைக்கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:லேவி 26:11 நியா 2:14 சங் 5:4 சங் 10:3 சங் 78:59 சங் 106:40 ஆமோ 3:2 ஆமோ 3:3 சகரி 11:8 வெளிப் 3:16
20என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள்.உபா 31:17 உபா 31:18 யோபு 13:24 யோபு 34:29 ஏசா 64:7 எரே 18:17 ஓசி 9:12
21தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைப் கோபப்படுத்துவேன்.உபா 32:16 சங் 78:58
22என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.உபா 29:20 எண் 16:35 சங் 21:9 சங் 83:14 சங் 97:3 ஏசா 66:15 ஏசா 66:16 எரே 4:4 எரே 15:14 எரே 17:4 புலம் 2:3 புலம் 4:11 எசே 36:5 நாகூ 1:6 மல்கி 4:1 மல்கி 4:2 மாற் 9:43-48 2தெச 1:8 எபிரெ 12:29
23தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன்.உபா 28:15 லேவி 26:18 லேவி 26:24 ஏசா 24:17 ஏசா 24:18 ஏசா 26:15 எரே 15:2 எரே 15:3 எசே 14:21 மத் 24:7 மத் 24:8
24அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.உபா 28:53 எரே 14:18 புலம் 4:4-9 புலம் 5:10
25வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், கன்னியையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும்.லேவி 26:36 லேவி 26:37 ஏசா 30:16 எரே 9:21 புலம் 1:20 எசே 7:15 2கொரி 7:5
26எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று,உபா 28:25 உபா 28:37 உபா 28:64 லேவி 26:33 லேவி 26:38 ஏசா 63:16 லூக் 21:24
27நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பேர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.1சாமு 12:22 ஏசா 37:28 ஏசா 37:29 ஏசா 37:35 ஏசா 47:7 எரே 19:4 புலம் 1:9 எசே 20:13 எசே 20:14 எசே 20:20-22 சகரி 1:14 சகரி 1:15
28அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை.உபா 32:6 யோபு 28:28 சங் 81:12 நீதி 1:7 ஏசா 27:11 ஏசா 29:14 எரே 4:22 எரே 8:9 ஓசி 4:6 மத் 13:14 மத் 13:15 ரோம 11:25 1கொரி 3:19
29அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.உபா 5:29 சங் 81:13 சங் 107:15 சங் 107:43 ஏசா 48:18 ஏசா 48:19 ஓசி 14:9 லூக் 19:41 லூக் 19:42
30அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?லேவி 26:8 யோசு 23:10 நியா 7:22 நியா 7:23 1சாமு 14:15-17 2நாளா 24:24 ஏசா 30:17
31தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.யாத் 14:25 எண் 23:8 எண் 23:23 1சாமு 2:2 1சாமு 4:8 எஸ்றா 1:3 எஸ்றா 6:9-12 எஸ்றா 7:20 எஸ்றா 7:21 எரே 40:3 தானி 2:47 தானி 3:29 தானி 6:26 தானி 6:27
32அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.ஏசா 1:10 எரே 2:21 புலம் 4:6 எசே 16:45-51 மத் 11:24
33அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.யோபு 20:14-16 சங் 58:4 சங் 140:3 எரே 8:14 ரோம 3:13
34இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?யோபு 14:17 எரே 2:22 ஓசி 13:12 ரோம 2:5 1கொரி 4:5 வெளிப் 20:12 வெளிப் 20:13
35பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.உபா 32:43 சங் 94:1 நாகூ 1:2 நாகூ 1:6 ரோம 12:19 ரோம 13:4 எபிரெ 10:30
36கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.சங் 7:8 சங் 50:4 சங் 96:13 சங் 135:14
37அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?நியா 10:14 2இரா 3:13 எரே 2:28
38அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.லேவி 21:21 சங் 50:13 எசே 16:18 எசே 16:19 ஓசி 2:8 செப் 2:11
39நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.சங் 102:27 ஏசா 41:4 ஏசா 45:5 ஏசா 45:18 ஏசா 45:22 ஏசா 46:4 ஏசா 48:12 எபிரெ 1:12 வெளிப் 1:11 வெளிப் 2:8
40நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.ஆதி 14:22 யாத் 6:8 எண் 14:28-30 எரே 4:2 எபிரெ 6:17 எபிரெ 6:18 வெளிப் 10:5 வெளிப் 10:6
41மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.சங் 7:12 ஏசா 27:1 ஏசா 34:5 ஏசா 34:6 ஏசா 66:16 எசே 21:9-15 எசே 21:20-15 செப் 2:12
42கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும்.உபா 32:23 சங் 45:5 சங் 68:23 ஏசா 34:6-8 எரே 16:10 எசே 35:6-8 எசே 38:21 எசே 38:22
43ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார்.ஆதி 12:3 1இரா 8:43 சங் 22:27 ஏசா 11:10 ஏசா 19:23 ஏசா 19:25 லூக் 2:10 லூக் 2:11 லூக் 2:32 அப் 13:47 அப் 13:48 ரோம 15:9-13 வெளிப் 5:9 வெளிப் 5:10
44மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.உபா 31:22 உபா 31:30
45மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
46அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலேவையுங்கள்.உபா 6:6 உபா 6:7 உபா 11:18 1நாளா 22:19 நீதி 3:1-4 எசே 40:4 லூக் 9:44 எபிரெ 2:1
47இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.உபா 30:19 லேவி 18:5 நீதி 3:1 நீதி 3:2 நீதி 3:18 நீதி 3:22 நீதி 4:22 ஏசா 45:19 மத் 6:33 ரோம 10:5 ரோம 10:6 1தீமோ 4:8 1தீமோ 6:6-8 1பேது 3:10-12 2பேது 1:3 2பேது 1:16 வெளிப் 22:14
48அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:எண் 27:12 எண் 27:13
49நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;உபா 34:1 எண் 33:47 எண் 33:48
50நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,ஆதி 15:15 ஆதி 25:8 ஆதி 25:17 ஆதி 49:33 தானி 12:13
51உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.உபா 3:23-27 எண் 20:11 எண் 20:12 எண் 20:24 எண் 27:14
52நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.உபா 32:49 உபா 34:1-4 எண் 27:12 எபிரெ 11:13 எபிரெ 11:39
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.