இணை வசன வேதாகமம்

Click to Subscribe

உபாகமம் 30

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,உபா 4:30 லேவி 26:40-46
2உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,உபா 4:28-31 நெகே 1:9 ஏசா 55:6 ஏசா 55:7 புலம் 3:32 புலம் 3:40 ஓசி 3:5 ஓசி 6:1 ஓசி 6:2 ஓசி 14:1-3 யோவே 2:12 யோவே 2:13 சகரி 12:10 2கொரி 3:16 1யோவா 1:9
3உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.சங் 106:45-47 சங் 126:1-4 ஏசா 56:8 எரே 29:14 எரே 31:10 புலம் 3:22 புலம் 3:32 ரோம 11:23 ரோம 11:26 ரோம 11:31
4உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக்கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,உபா 28:64 நெகே 1:9 ஏசா 11:11-16 எசே 39:25-29 செப் 3:19 செப் 3:20
5உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.
6உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,உபா 10:16 எரே 4:4 எரே 9:26 எரே 32:39 எசே 11:19 எசே 11:20 எசே 36:26 எசே 36:27 யோவா 3:3-7 ரோம 2:28 ரோம 2:29 ரோம 11:26 2கொரி 5:17 கொலோ 2:11
7இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்களின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.எண் 24:14 சங் 137:7-9 ஏசா 10:12 ஏசா 14:1-27 எரே 25:12-16 எரே 25:29-16 எரே 50:33 எரே 50:34 எரே 51:24-26 எரே 51:34-37 புலம் 3:54-66 புலம் 4:21 புலம் 4:22 எசே 25:3 எசே 25:6 எசே 25:8 எசே 25:12 எசே 25:15 ஆமோ 1:3 ஆமோ 1:6 ஆமோ 1:9 ஆமோ 1:11 ஆமோ 1:13 ஒபதி 1:10 சகரி 12:3
8நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.உபா 30:2 நீதி 16:1 ஏசா 1:25 ஏசா 1:26 எரே 31:33 எரே 32:39 எரே 32:40 எசே 11:19 எசே 11:20 எசே 36:27 எசே 37:24 ரோம 11:26 ரோம 11:27 எபே 2:16 பிலிப் 2:13
9அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.உபா 28:4 உபா 28:11-14 லேவி 26:4 லேவி 26:6 லேவி 26:9 லேவி 26:10
10உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.உபா 30:2 உபா 30:8 ஏசா 55:2 ஏசா 55:3 1கொரி 7:19
11நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.சங் 147:19 சங் 147:20 ஏசா 45:19 ரோம 16:25 ரோம 16:26 கொலோ 1:26 கொலோ 1:27
12நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;நீதி 30:4 யோவா 3:13 ரோம 10:6 ரோம 10:7
13நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக்கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;அப் 10:22 அப் 10:33 அப் 16:9 ரோம 10:14 ரோம 10:15
14நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.எசே 2:5 எசே 33:33 லூக் 10:11 லூக் 10:12 யோவா 5:46 அப் 13:26 அப் 13:38-41 அப் 28:23-28 எபிரெ 2:1-3
15இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.உபா 30:1 உபா 30:19 உபா 11:26 உபா 28:1-14 உபா 32:47 மாற் 16:16 யோவா 3:16 கலா 3:13 கலா 3:14 கலா 5:6 1யோவா 3:23 1யோவா 5:11 1யோவா 5:12
16நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.உபா 30:6 மத் 22:37 மத் 22:38 1கொரி 7:19 1யோவா 5:2 1யோவா 5:3
17நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,உபா 29:18-28 1சாமு 12:25 யோவா 3:19-21
18நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.உபா 8:19 உபா 8:20 உபா 31:29 யோசு 23:15 யோசு 23:16 ஏசா 63:17 ஏசா 63:18
19நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,உபா 4:26 உபா 31:28 உபா 32:1 ஏசா 1:2 எரே 2:12 எரே 2:13 எரே 22:29 எரே 22:30 மீகா 6:1 மீகா 6:2 1தீமோ 5:21
20கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.உபா 30:6 உபா 30:16 உபா 10:12 உபா 11:22
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.