| 1 | விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. | லேவி 21:17-21 லேவி 22:22-24 கலா 3:28 |
| 2 | வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. | ஏசா 57:3 சகரி 9:6 யோவா 8:41 எபிரெ 12:8 |
| 3 | அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. | ரூத் 4:6 ரூத் 4:10-22 நெகே 4:3 நெகே 4:7 நெகே 13:1 நெகே 13:2 நெகே 13:23 ஏசா 56:3 |
| 4 | நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும். | உபா 2:28 உபா 2:29 ஆதி 14:17 ஆதி 14:18 1சாமு 25:11 1இரா 18:4 ஏசா 63:9 சகரி 2:8 மத் 25:40 அப் 9:4 |
| 5 | உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். | எண் 22:35 எண் 23:5-12 எண் 23:16-26 எண் 24:9 மீகா 6:5 ரோம 8:31 2கொரி 4:17 |
| 6 | நீ உன் ஆயுள் நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே. | 2சாமு 8:2 2சாமு 12:31 எஸ்றா 9:12 நெகே 13:23-25 |
| 7 | ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். | ஆதி 25:24-26 ஆதி 25:30-26 எண் 20:14 ஒபதி 1:10-12 மல்கி 1:2 |
| 8 | மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாம். | உபா 23:1 ரோம 3:29 ரோம 3:30 எபே 2:12 எபே 2:13 |
| 9 | நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக. | யோசு 6:18 யோசு 7:11-13 நியா 20:26 2நாளா 19:4 2நாளா 20:3-13 2நாளா 31:20 2நாளா 31:21 2நாளா 32:1-22 லூக் 3:14 வெளிப் 19:11-14 |
| 10 | இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல், | லேவி 15:16 எண் 5:2 எண் 5:3 1கொரி 5:11-13 |
| 11 | சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன். | லேவி 11:25 லேவி 15:17-23 |
| 12 | நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்க வேண்டும். |
| 13 | உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்து போனதை மூடிப்போடக்கடவாய். | எசே 24:6-8 |
| 14 | உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. | ஆதி 17:1 லேவி 26:12 2கொரி 6:16 |
| 15 | தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக. | 1சாமு 30:15 ஒபதி 1:14 பிலேமோ 10:19 |
| 16 | அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம். | ஏசா 16:3 ஏசா 16:4 லூக் 15:15-24 தீத் 3:2 தீத் 3:3 |
| 17 | இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது. | உபா 22:21 உபா 22:29 லேவி 19:29 நீதி 2:16 |
| 18 | வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். | எசே 16:33 |
| 19 | கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும், ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டிவாங்காயாக. | யாத் 22:25 லேவி 25:35-37 நெகே 5:1-7 சங் 15:5 எசே 18:7 எசே 18:8 எசே 18:13 எசே 18:16-18 எசே 22:12 லூக் 6:34 லூக் 6:35 |
| 20 | அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக. | உபா 14:21 உபா 15:3 லேவி 19:33 லேவி 19:34 |
| 21 | நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும். | உபா 23:18 ஆதி 28:20 ஆதி 35:1-3 லேவி 27:2-34 எண் 30:2-16 சங் 56:12 சங் 66:13 சங் 66:14 சங் 76:11 சங் 116:18 பிரச 5:4 பிரச 5:5 யோனா 1:16 யோனா 2:9 நாகூ 1:15 |
| 22 | நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. |
| 23 | உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக. | எண் 30:2 நியா 11:30 நியா 11:31 நியா 11:35 1சாமு 1:11 சங் 66:13 சங் 66:14 சங் 116:18 நீதி 20:25 பிரச 5:4 பிரச 5:5 |
| 24 | நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது. | ரோம 12:13 1கொரி 10:26 எபிரெ 13:5 |
| 25 | பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது. | மத் 12:1 மத் 12:2 மாற் 2:23 லூக் 6:1 லூக் 6:2 |