| 1 | என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து நித்திரைப்பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: | சகரி 1:9 சகரி 1:13 சகரி 1:19 சகரி 2:3 சகரி 3:6 சகரி 3:7 |
| 2 | நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. | சகரி 5:2 எரே 1:11-13 |
| 3 | அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். | சகரி 4:11 சகரி 4:12 சகரி 4:14 நியா 9:9 ரோம 11:17 ரோம 11:24 வெளிப் 11:4 |
| 4 | நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். | சகரி 4:12-14 சகரி 1:9 சகரி 1:19 சகரி 5:6 சகரி 6:4 தானி 7:16-19 தானி 12:8 மத் 13:36 வெளிப் 7:13 வெளிப் 7:14 |
| 5 | என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். | சகரி 4:13 மாற் 4:13 |
| 6 | அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 9:13-15 எண் 27:16 2நாளா 14:11 ஏசா 11:2-4 ஏசா 30:1 ஏசா 32:15 ஏசா 63:10-14 எசே 37:11-14 ஓசி 1:7 ஆகா 2:2-5 1கொரி 2:4 1கொரி 2:5 2கொரி 10:4 2கொரி 10:5 1பேது 1:12 |
| 7 | பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். | சகரி 14:4 சகரி 14:5 சங் 114:4 சங் 114:6 ஏசா 40:3 ஏசா 40:4 ஏசா 41:15 ஏசா 64:1-3 எரே 51:25 தானி 2:34 தானி 2:35 மீகா 1:4 மீகா 4:1 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:6 ஆகா 2:6-9 ஆகா 2:21-23 மத் 21:21 லூக் 3:5 வெளிப் 16:20 |
| 8 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 9 | செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். | எஸ்றா 3:8-13 எஸ்றா 5:16 |
| 10 | அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார். | எஸ்றா 3:12 எஸ்றா 3:13 நெகே 4:2-4 யோபு 8:7 நீதி 4:18 தானி 2:34 தானி 2:35 ஓசி 6:3 ஆகா 2:3 மத் 13:31-33 1கொரி 1:28 1கொரி 1:29 |
| 11 | பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன். | சகரி 4:3 வெளிப் 11:4 |
| 12 | மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன். | மத் 20:23 வெளிப் 11:4 |
| 13 | அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். | சகரி 4:5 எபிரெ 5:11 எபிரெ 5:12 |
| 14 | அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார். | சகரி 6:13 யாத் 29:7 யாத் 40:15 லேவி 8:12 1சாமு 10:1 1சாமு 16:1 1சாமு 16:12 1சாமு 16:13 சங் 2:6 சங் 89:20 சங் 110:4 ஏசா 61:1-3 தானி 9:24-26 ஆகா 1:1-12 எபிரெ 1:8 எபிரெ 1:9 எபிரெ 7:1 எபிரெ 7:2 வெளிப் 11:4 |