இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சகரியா 4

                   
புத்தகங்களைக் காட்டு
1என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து நித்திரைப்பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:சகரி 1:9 சகரி 1:13 சகரி 1:19 சகரி 2:3 சகரி 3:6 சகரி 3:7
2நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.சகரி 5:2 எரே 1:11-13
3அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.சகரி 4:11 சகரி 4:12 சகரி 4:14 நியா 9:9 ரோம 11:17 ரோம 11:24 வெளிப் 11:4
4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.சகரி 4:12-14 சகரி 1:9 சகரி 1:19 சகரி 5:6 சகரி 6:4 தானி 7:16-19 தானி 12:8 மத் 13:36 வெளிப் 7:13 வெளிப் 7:14
5என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.சகரி 4:13 மாற் 4:13
6அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.சகரி 9:13-15 எண் 27:16 2நாளா 14:11 ஏசா 11:2-4 ஏசா 30:1 ஏசா 32:15 ஏசா 63:10-14 எசே 37:11-14 ஓசி 1:7 ஆகா 2:2-5 1கொரி 2:4 1கொரி 2:5 2கொரி 10:4 2கொரி 10:5 1பேது 1:12
7பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.சகரி 14:4 சகரி 14:5 சங் 114:4 சங் 114:6 ஏசா 40:3 ஏசா 40:4 ஏசா 41:15 ஏசா 64:1-3 எரே 51:25 தானி 2:34 தானி 2:35 மீகா 1:4 மீகா 4:1 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:6 ஆகா 2:6-9 ஆகா 2:21-23 மத் 21:21 லூக் 3:5 வெளிப் 16:20
8பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
9செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.எஸ்றா 3:8-13 எஸ்றா 5:16
10அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.எஸ்றா 3:12 எஸ்றா 3:13 நெகே 4:2-4 யோபு 8:7 நீதி 4:18 தானி 2:34 தானி 2:35 ஓசி 6:3 ஆகா 2:3 மத் 13:31-33 1கொரி 1:28 1கொரி 1:29
11பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.சகரி 4:3 வெளிப் 11:4
12மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.மத் 20:23 வெளிப் 11:4
13அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.சகரி 4:5 எபிரெ 5:11 எபிரெ 5:12
14அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.சகரி 6:13 யாத் 29:7 யாத் 40:15 லேவி 8:12 1சாமு 10:1 1சாமு 16:1 1சாமு 16:12 1சாமு 16:13 சங் 2:6 சங் 89:20 சங் 110:4 ஏசா 61:1-3 தானி 9:24-26 ஆகா 1:1-12 எபிரெ 1:8 எபிரெ 1:9 எபிரெ 7:1 எபிரெ 7:2 வெளிப் 11:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.