| 1 | ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: | ஆகா 2:1 ஆகா 2:10 ஆகா 2:20 எஸ்றா 4:24 எஸ்றா 5:1 எஸ்றா 5:2 சகரி 1:1 |
| 2 | இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எண் 13:31 எஸ்றா 4:23 எஸ்றா 4:24 எஸ்றா 5:1 எஸ்றா 5:2 நெகே 4:10 நீதி 22:13 நீதி 26:13-16 நீதி 29:25 பிரச 9:10 பிரச 11:4 உன்ன 5:2 உன்ன 5:3 |
| 3 | ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: | எஸ்றா 5:1 சகரி 1:1 |
| 4 | இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? | 2சாமு 7:2 சங் 132:3-5 மத் 6:33 பிலிப் 2:21 |
| 5 | இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். | ஆகா 1:7 ஆகா 2:15-18 புலம் 3:40 எசே 18:28 லூக் 15:17 2கொரி 13:5 கலா 6:4 |
| 6 | நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். | ஆகா 1:9 ஆகா 2:16 லேவி 26:20 உபா 28:38-40 2சாமு 21:1 சங் 107:34 ஏசா 5:10 எரே 14:4 ஓசி 4:10 ஓசி 8:7 யோவே 1:10-13 ஆமோ 4:6-9 மீகா 6:14 மீகா 6:15 சகரி 8:10 மல்கி 2:2 மல்கி 3:9-11 |
| 7 | உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | ஆகா 1:5 சங் 119:59 சங் 119:60 ஏசா 28:10 பிலிப் 3:1 |
| 8 | நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | 2நாளா 2:8-10 எஸ்றா 3:7 எஸ்றா 6:4 சகரி 11:1 சகரி 11:2 |
| 9 | அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | ஆகா 1:6 ஆகா 2:16 ஆகா 2:17 ஏசா 17:10 ஏசா 17:11 மல்கி 3:8-11 |
| 10 | ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடாமலும் போயிற்று. | லேவி 26:19 உபா 28:23 உபா 28:24 1இரா 8:35 1இரா 17:1 எரே 14:1-6 ஓசி 2:9 யோவே 1:18-20 |
| 11 | நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார். | உபா 28:22 1இரா 17:1 2இரா 8:1 யோபு 34:29 புலம் 1:21 ஆமோ 5:8 ஆமோ 7:4 ஆமோ 9:6 |
| 12 | அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள். | ஆகா 1:14 எஸ்றா 5:2 ஏசா 55:10 ஏசா 55:11 கொலோ 1:6 1தெச 1:5 1தெச 1:6 1தெச 2:13 1தெச 2:14 |
| 13 | அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | நியா 2:1 ஏசா 42:19 ஏசா 44:26 எசே 3:17 மல்கி 2:7 மல்கி 3:1 2கொரி 5:20 |
| 14 | பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள். | 1நாளா 5:26 2நாளா 36:22 எஸ்றா 1:1 எஸ்றா 1:5 எஸ்றா 7:27 எஸ்றா 7:28 சங் 110:3 1கொரி 12:4-11 2கொரி 8:16 எபிரெ 13:21 |
| 15 | தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே இது நடந்தது. | ஆகா 1:1 ஆகா 2:1 ஆகா 2:10 ஆகா 2:20 |