இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மீகா 3

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.மீகா 3:9 மீகா 3:10 ஏசா 1:10 எரே 13:15-18 எரே 22:2 எரே 22:3 ஓசி 5:1 ஆமோ 4:1
2ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,1இரா 21:20 1இரா 22:6-8 ஆமோ 5:10-14 லூக் 19:14 யோவா 7:7 யோவா 15:18 யோவா 15:19 யோவா 15:23 யோவா 15:24 அப் 7:51 அப் 7:52 ரோம 12:9 2தீமோ 3:3
3என் ஜனத்தின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.சங் 14:4
4அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.மீகா 2:3 மீகா 2:4 எரே 5:31
5தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:மீகா 3:11 ஏசா 9:15 ஏசா 9:16 எரே 14:14 எரே 14:15 எரே 23:9-17 எரே 23:27-17 எரே 23:32-17 எரே 28:15-17 எரே 29:21-23 எசே 13:10-16 எசே 22:25-29 மல்கி 2:8 மத் 15:14
6தரிசனங்காணக்கூடாத இராத்திரியும், குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப்போகும்.சங் 74:9 ஏசா 8:20-22 எரே 13:16 எசே 13:22 எசே 13:23 சகரி 13:2-4
7தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நாணி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.யாத் 8:18 யாத் 8:19 யாத் 9:11 1சாமு 9:9 ஏசா 44:25 ஏசா 47:12-14 தானி 2:9-11 சகரி 13:4 2தீமோ 3:8 2தீமோ 3:9
8நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.யோபு 32:18 ஏசா 11:2 ஏசா 11:3 ஏசா 58:1 எரே 1:18 எரே 6:11 எரே 15:19-21 எரே 20:9 எசே 3:14 மத் 7:29 மாற் 3:17 அப் 4:8-12 அப் 4:19-12 அப் 4:20-12 அப் 7:54-57 அப் 13:9-12 அப் 18:5 அப் 18:6 அப் 18:9-11 1கொரி 2:4 1கொரி 2:12 1கொரி 2:13
9நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,மீகா 3:1 யாத் 3:16 ஓசி 5:1
10சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.எரே 22:13-17 எசே 22:25-28 ஆபகூ 2:9-12 செப் 3:3 மத் 27:25 யோவா 11:50
11அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.மீகா 7:3 எண் 16:15 1சாமு 8:3 1சாமு 12:3 1சாமு 12:4 ஏசா 1:23 எசே 22:12 எசே 22:27 ஓசி 4:18 செப் 3:3
12ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போகும், ஆலயத்தின் பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போகும்.மீகா 1:6 சங் 79:1 சங் 107:34 எரே 26:18 மத் 24:2 அப் 6:13 அப் 6:14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.