இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஆமோஸ் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.ஆமோ 7:1 ஆமோ 7:4 ஆமோ 7:7
2அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.ஆமோ 7:8 எரே 1:11-14 எசே 8:6 எசே 8:12 எசே 8:17 சகரி 1:18-21 சகரி 5:2 சகரி 5:5 சகரி 5:6
3அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.ஆமோ 8:10 ஆமோ 5:23 ஓசி 10:5 ஓசி 10:6 யோவே 1:5 யோவே 1:11 யோவே 1:13 சகரி 11:1-3
4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி:ஆமோ 7:16 1இரா 22:19 ஏசா 1:10 ஏசா 28:14 எரே 5:21 எரே 28:15
5நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,எண் 10:10 எண் 28:11-15 2இரா 4:23 சங் 81:3 சங் 81:4 ஏசா 1:13 கொலோ 2:16
6நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.ஆமோ 8:4 ஆமோ 2:6 லேவி 25:39-42 நெகே 5:1-5 நெகே 5:8-5 யோவே 3:3 யோவே 3:6
7அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.ஆமோ 6:8 உபா 33:26-29 சங் 47:4 சங் 68:34 லூக் 2:32
8இதினிமித்தம் தேசம் அதிரவும் அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?சங் 18:7 சங் 60:2 சங் 60:3 சங் 114:3-7 ஏசா 5:25 ஏசா 24:19 ஏசா 24:20 எரே 4:24-26 மீகா 1:3-5 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:5-8 ஆகா 2:6 ஆகா 2:7
9அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,ஆமோ 4:13 ஆமோ 5:8 யோபு 5:14 ஏசா 13:10 ஏசா 29:9 ஏசா 29:10 ஏசா 59:9 ஏசா 59:10 எரே 15:9 மீகா 3:6 மத் 24:29 வெளிப் 6:12 வெளிப் 8:12
10உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.ஆமோ 8:3 ஆமோ 5:23 ஆமோ 6:4-7 உபா 16:14 1சாமு 25:36-38 2சாமு 13:28-31 யோபு 20:23 ஏசா 21:3 ஏசா 21:4 ஏசா 22:12-14 தானி 5:4-6 ஓசி 2:11 நாகூ 1:10
11இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.1சாமு 3:1 1சாமு 28:6 1சாமு 28:15 சங் 74:9 ஏசா 5:6 ஏசா 30:20 ஏசா 30:21 எசே 7:26 மீகா 3:6 மத் 9:36
12அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.நீதி 14:6 தானி 12:4 மத் 11:25-27 மத் 12:30 மத் 24:23-26 ரோம 9:31-33 ரோம 11:7-10 2தீமோ 3:6 2தீமோ 3:7
13அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.உபா 32:25 சங் 63:1 சங் 144:12-15 ஏசா 40:30 ஏசா 41:17-20 எரே 48:18 புலம் 1:18 புலம் 2:10 புலம் 2:21 ஓசி 2:3 சகரி 9:17
14தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.ஓசி 4:15 செப் 1:5
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.