| 1 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 2 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன: | லேவி 23:4 லேவி 23:37 யாத் 23:14-17 ஏசா 1:13 ஏசா 1:14 ஏசா 33:20 புலம் 1:4 ஓசி 2:11 நாகூ 1:15 யோவா 5:1 கொலோ 2:1 யாத் 32:5 எண் 10:2 எண் 10:3 எண் 10:10 2இரா 10:20 2நாளா 30:5 சங் 81:3 யோவே 1:14 யோவே 2:15 யோனா 3:5-9 |
| 3 | ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. | லேவி 19:3 யாத் 16:23 யாத் 16:29 யாத் 20:8-11 யாத் 23:12 யாத் 31:15 யாத் 34:21 யாத் 35:2 யாத் 35:3 உபா 5:13 ஏசா 56:2 ஏசா 56:6 ஏசா 58:13 லூக் 13:14 லூக் 23:56 அப் 15:21 வெளிப் 1:10 |
| 4 | சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன: | லேவி 23:2 லேவி 23:37 யாத் 23:14 |
| 5 | முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும், | யாத் 12:2-14 யாத் 12:18-14 யாத் 13:3-10 யாத் 23:15 எண் 9:2-7 எண் 28:16 உபா 16:1-8 யோசு 5:10 2நாளா 35:18 2நாளா 35:19 மத் 26:17 மாற் 14:12 லூக் 22:7 1கொரி 5:7 1கொரி 5:8 |
| 6 | அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும். | யாத் 12:15 யாத் 12:16 யாத் 13:6 யாத் 13:7 யாத் 34:18 எண் 28:17 எண் 28:18 உபா 16:8 அப் 12:3 அப் 12:4 |
| 7 | முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். | எண் 28:18-25 |
| 8 | ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார். |
| 9 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 10 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். | லேவி 14:34 |
| 11 | உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும். | லேவி 9:21 லேவி 10:14 யாத் 29:24 |
| 12 | நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், | லேவி 1:10 எபிரெ 10:10-12 1பேது 1:19 |
| 13 | கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். | லேவி 2:14-16 லேவி 14:10 எண் 15:3-12 |
| 14 | உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. | லேவி 19:23-25 லேவி 25:2 லேவி 25:3 ஆதி 4:4 ஆதி 4:5 யோசு 5:11 யோசு 5:12 |
| 15 | நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, | லேவி 23:10 லேவி 23:11 லேவி 25:8 யாத் 34:22 உபா 16:9 உபா 16:10 |
| 16 | ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள். | அப் 2:1 |
| 17 | நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து, | எண் 28:26 |
| 18 | அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலியையும் செலுத்தி, | லேவி 23:12 லேவி 23:13 எண் 28:27-31 மல்கி 1:13 மல்கி 1:14 |
| 19 | வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள். | லேவி 4:23-28 லேவி 16:15 எண் 15:24 எண் 28:30 ரோம 8:3 2கொரி 5:21 |
| 20 | அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும். | லேவி 23:17 லேவி 7:29 லேவி 7:30 யாத் 29:24 லூக் 2:14 எபே 2:14 |
| 21 | அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. | லேவி 23:2 லேவி 23:4 யாத் 12:16 உபா 16:11 ஏசா 11:10 |
| 22 | உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். | லேவி 19:9 லேவி 19:10 உபா 16:11-14 உபா 24:19-21 ரூத் 2:3-7 ரூத் 2:15-7 ரூத் 2:16-23 யோபு 31:16-21 சங் 41:1-3 சங் 112:9 நீதி 11:24 நீதி 11:25 ஏசா 58:7 ஏசா 58:8 ஏசா 58:10 லூக் 11:41 2கொரி 9:5-12 |
| 23 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 24 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக. | எண் 10:10 எண் 29:1-6 1நாளா 15:28 2நாளா 5:13 எஸ்றா 3:6 சங் 81:1-4 சங் 98:6 ஏசா 27:13 1கொரி 15:52 1தெச 4:16 |
| 25 | அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார். |
| 26 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 27 | அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள். | லேவி 16:29 லேவி 16:30 லேவி 25:9 எண் 29:7-11 |
| 28 | அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். | லேவி 16:34 ஏசா 53:10 தானி 9:24 சகரி 3:9 ரோம 5:10 ரோம 5:11 எபிரெ 9:12 எபிரெ 9:26 எபிரெ 10:10 எபிரெ 10:14 1யோவா 2:2 1யோவா 4:10 1யோவா 5:6 |
| 29 | அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். | லேவி 23:27 லேவி 23:32 ஏசா 22:12 எரே 31:9 எசே 7:16 |
| 30 | அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன். | லேவி 20:3 லேவி 20:5 லேவி 20:6 ஆதி 17:14 எரே 15:7 எசே 14:9 செப் 2:5 1கொரி 3:17 |
| 31 | அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை. |
| 32 | அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார். | லேவி 16:31 மத் 11:28-30 எபிரெ 4:3 எபிரெ 4:11 |
| 33 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 34 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக. | யாத் 23:16 யாத் 34:22 எண் 29:12 உபா 16:13-15 எஸ்றா 3:4 நெகே 8:14 சகரி 14:16-19 யோவா 1:14 யோவா 7:2 எபிரெ 11:9 எபிரெ 11:13 |
| 35 | முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. | லேவி 23:7 லேவி 23:8 லேவி 23:24 லேவி 23:25 |
| 36 | ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். | எண் 29:12-38 |
| 37 | நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, | லேவி 23:2 லேவி 23:4 உபா 16:16 உபா 16:17 |
| 38 | நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே. | லேவி 23:3 லேவி 19:3 ஆதி 2:2 ஆதி 2:3 யாத் 20:8-11 |
| 39 | நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு. | லேவி 23:34 யாத் 23:16 உபா 16:13 |
| 40 | முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள். | நெகே 8:15 மத் 21:8 |
| 41 | வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும். | எண் 29:12 நெகே 8:18 |
| 42 | நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, | ஆதி 33:17 எண் 24:2 எண் 24:5 நெகே 8:14-17 எரே 35:10 2கொரி 5:1 எபிரெ 11:13-16 |
| 43 | ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். | யாத் 13:14 உபா 31:10-13 சங் 78:5 சங் 78:6 |
| 44 | அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான். | லேவி 23:1 லேவி 23:2 லேவி 21:24 மத் 18:20 |