| 1 | அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். | எசே 2:3 எசே 2:6 எசே 2:8 எசே 3:1 எசே 3:4 எசே 3:10 எசே 3:17 எசே 4:1 எசே 5:1 எசே 7:2 எசே 12:3 எசே 13:2 எசே 14:3 எசே 14:13 எசே 15:2 எசே 16:2 எசே 17:2 எசே 20:3 எசே 37:3 சங் 8:4 தானி 8:17 மத் 16:13-16 யோவா 3:13 யோவா 3:16 |
| 2 | இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன். | எசே 3:12 எசே 3:14 எசே 3:24 எசே 36:27 எண் 11:25 எண் 11:26 நியா 13:25 1சாமு 16:13 நெகே 9:30 யோவே 2:28 யோவே 2:29 வெளிப் 11:11 |
| 3 | அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள். | எசே 3:4-8 2நாளா 36:15 2நாளா 36:16 ஏசா 6:8-10 எரே 1:7 எரே 7:2 எரே 25:3-7 எரே 26:2-6 எரே 36:2 மாற் 12:2-5 லூக் 24:47 லூக் 24:48 யோவா 20:21 யோவா 20:22 ரோம 10:15 |
| 4 | அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு. | எசே 3:7 உபா 10:16 உபா 31:27 2நாளா 30:8 2நாளா 36:13 சங் 95:8 ஏசா 48:4 எரே 3:3 எரே 5:3 எரே 6:15 எரே 8:12 மத் 10:16 |
| 5 | கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். | எசே 2:7 எசே 3:10 எசே 3:11 எசே 3:27 மத் 10:12-15 அப் 13:46 ரோம 3:3 2கொரி 2:15-17 |
| 6 | மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார். | எசே 3:8 எசே 3:9 2இரா 1:15 ஏசா 51:12 எரே 1:8 எரே 1:17 மீகா 3:8 மத் 10:28 லூக் 12:4 அப் 4:13 அப் 4:19 அப் 4:29 எபே 6:19 பிலிப் 1:28 2தீமோ 1:7 |
| 7 | கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. | எசே 3:10 எசே 3:17 எரே 1:7 எரே 1:17 எரே 23:28 எரே 26:2 யோனா 3:2 மத் 28:20 |
| 8 | மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார். | லேவி 10:3 எண் 20:10-13 எண் 20:24-13 1இரா 13:21 1இரா 13:22 ஏசா 50:5 1பேது 5:3 |
| 9 | அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது. | எசே 8:3 எரே 1:9 தானி 5:5 தானி 10:10 தானி 10:16-18 |
| 10 | அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது. | ஏசா 30:8-11 ஆபகூ 2:2 |