| 1 | இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். | ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 40:1-5 2சாமு 23:3 2நாளா 31:20 2நாளா 31:21 சங் 45:1 சங் 45:6 சங் 45:7 சங் 72:1 சங் 72:2 சங் 99:4 எரே 23:5 எரே 23:6 எரே 33:15 ஓசி 3:5 சகரி 9:9 ரோம 5:21 எபிரெ 1:8 எபிரெ 1:9 வெளிப் 19:11 |
| 2 | அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். | ஏசா 7:14 ஏசா 8:10-14 ஏசா 9:6 சங் 146:3-5 மீகா 5:4 மீகா 5:5 சகரி 13:7 1தீமோ 3:16 |
| 3 | அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும். | ஏசா 29:18 ஏசா 29:24 ஏசா 30:26 ஏசா 35:5 ஏசா 35:6 ஏசா 54:13 ஏசா 60:1 ஏசா 60:2 எரே 31:34 மத் 13:11 மாற் 7:37 மாற் 8:22-25 அப் 26:18 2கொரி 4:6 1யோவா 2:20 1யோவா 2:21 |
| 4 | பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும். | ஏசா 29:24 நெகே 8:8-12 மத் 11:25 மத் 16:17 அப் 6:7 அப் 26:9-11 கலா 1:23 |
| 5 | மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை. | ஏசா 5:20 சங் 15:4 மல்கி 3:18 |
| 6 | ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான். | 1சாமு 24:13 1சாமு 25:10 1சாமு 25:11 எரே 13:23 மத் 12:34-36 மத் 15:19 யாக் 3:5 யாக் 3:6 |
| 7 | லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான். | ஏசா 1:23 ஏசா 5:23 எரே 5:26-28 மீகா 2:11 மீகா 7:3 மத் 26:14-16 மத் 26:59-16 மத் 26:60-16 |
| 8 | தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான். | 2சாமு 9:1-13 யோபு 31:16-21 சங் 112:9 நீதி 11:24 லூக் 6:33-35 அப் 9:39 அப் 11:29 அப் 11:30 2கொரி 8:2 2கொரி 9:6-11 |
| 9 | சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள். | ஏசா 3:16 ஏசா 47:7 ஏசா 47:8 உபா 28:56 எரே 6:2-6 எரே 48:11 எரே 48:12 புலம் 4:5 ஆமோ 6:1-6 |
| 10 | நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது. | ஏசா 3:17-26 ஏசா 24:7-12 எரே 25:10 எரே 25:11 ஓசி 3:4 |
| 11 | சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள். | ஏசா 2:19 ஏசா 2:21 ஏசா 22:4 ஏசா 22:5 ஏசா 33:14 லூக் 23:27-30 யாக் 5:5 |
| 12 | செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள். | புலம் 2:11 புலம் 4:3 புலம் 4:4 |
| 13 | என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும். | ஏசா 6:11 ஏசா 7:23 ஏசா 34:13 சங் 107:34 ஓசி 9:6 ஓசி 10:8 |
| 14 | அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும். | ஏசா 5:9 ஏசா 24:1-3 ஏசா 24:10-3 ஏசா 24:12-3 ஏசா 25:2 ஏசா 27:10 2இரா 25:9 லூக் 21:20 லூக் 21:24 |
| 15 | உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும். | ஏசா 11:2 ஏசா 11:3 ஏசா 44:3 ஏசா 45:8 ஏசா 59:19-21 ஏசா 63:11 சங் 104:30 சங் 107:33 நீதி 1:23 எசே 39:29 யோவே 2:28 யோவே 2:29 சகரி 12:10 லூக் 24:49 யோவா 7:39 அப் 2:17 அப் 2:18 அப் 2:33 2கொரி 3:8 தீத் 3:5 தீத் 3:6 |
| 16 | வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும். | ஏசா 35:8 ஏசா 42:4 ஏசா 56:6-8 ஏசா 60:21 சங் 94:14 சங் 94:15 ஓசி 3:5 1கொரி 6:9-11 தீத் 2:11 தீத் 2:12 1பேது 2:9-12 1பேது 4:1-4 |
| 17 | நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். | ஏசா 26:3 ஏசா 48:18 ஏசா 54:13 ஏசா 54:14 ஏசா 55:12 ஏசா 57:19 ஏசா 66:12 சங் 72:2 சங் 72:3 சங் 85:8 சங் 119:165 ரோம 14:17 பிலிப் 4:6-9 யாக் 3:17 யாக் 3:18 |
| 18 | என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். | ஏசா 33:20-22 ஏசா 35:9 ஏசா 35:10 ஏசா 60:17 ஏசா 60:18 எரே 23:5 எரே 23:6 எரே 33:16 எசே 34:25 எசே 34:26 ஓசி 2:18-23 சகரி 2:5 சகரி 2:8 எபிரெ 4:9 1யோவா 4:16 |
| 19 | ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும். | ஏசா 25:4 ஏசா 28:2 ஏசா 28:17 ஏசா 30:30 ஏசா 37:24 யாத் 9:18-26 எசே 13:11-13 மத் 7:25 வெளிப் 8:7 |
| 20 | மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள். | ஏசா 19:5-7 ஏசா 30:23 ஏசா 55:10 ஏசா 55:11 பிரச 11:1 அப் 2:41 அப் 4:4 அப் 5:14 1கொரி 3:6 யாக் 3:18 |