| 1 | கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது. | ஏசா 13:1 ஏசா 17:1 |
| 2 | கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன். | சங் 60:3 நீதி 13:15 |
| 3 | ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன். | ஏசா 15:5 ஏசா 16:9 ஏசா 16:11 ஆபகூ 3:16 |
| 4 | என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று. | ஏசா 5:11-14 1சாமு 25:36-38 2சாமு 13:28 2சாமு 13:29 எஸ்தர் 5:12 எஸ்தர் 7:6-10 யோபு 21:11-13 எரே 51:39 எரே 51:57 தானி 5:1 தானி 5:5 தானி 5:30 நாகூ 1:10 லூக் 21:34-36 |
| 5 | பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள். | ஏசா 22:13 ஏசா 22:14 தானி 5:1-5 1கொரி 15:32 |
| 6 | ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார். | ஏசா 62:6 2இரா 9:17-20 எரே 51:12 எரே 51:13 எசே 3:17 எசே 33:2-7 ஆபகூ 2:1 ஆபகூ 2:2 |
| 7 | அவன் ஒரு இரதத்தையும், ஜோடுஜோடான குதிரைவீரனையும், ஜோடுஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து: | ஏசா 21:9 ஏசா 37:24 |
| 8 | ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். | ஏசா 5:29 எரே 4:7 எரே 25:38 எரே 49:19 எரே 50:44 1பேது 5:8 |
| 9 | இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான். | எரே 50:3 எரே 50:9 எரே 50:29 எரே 50:42 எரே 51:27 |
| 10 | என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன். | ஏசா 41:15 ஏசா 41:16 2இரா 13:7 எரே 51:33 மீகா 4:13 ஆபகூ 3:12 மத் 3:12 |
| 11 | தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க; | ஆதி 25:14 1நாளா 1:30 |
| 12 | அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான். | ஏசா 17:14 எரே 50:27 எசே 7:5-7 எசே 7:10-7 எசே 7:12-7 |
| 13 | அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள். | 1இரா 10:15 எரே 25:23 எரே 25:24 எரே 49:28-33 கலா 4:25 |
| 14 | தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள். | ஆதி 25:15 1நாளா 1:30 யோபு 6:19 |
| 15 | அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும், நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள். | யோபு 6:19 யோபு 6:20 |
| 16 | ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும். | ஏசா 16:14 யோபு 7:1 |
| 17 | கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார். | ஏசா 10:18 ஏசா 10:19 ஏசா 17:4 ஏசா 17:5 சங் 107:39 |