இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 31

                   
புத்தகங்களைக் காட்டு
1ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:நீதி 30:1
2என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,ஏசா 49:15
3ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.நீதி 5:9-11 நீதி 7:26 நீதி 7:27 ஓசி 4:11
4திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.லேவி 10:9 லேவி 10:10 1இரா 20:12 1இரா 20:16-20 எஸ்தர் 3:15 பிரச 10:17 ஏசா 28:7 ஏசா 28:8 தானி 5:2-4 ஓசி 4:11 ஓசி 4:12 ஓசி 7:3-5 ஆபகூ 2:5 மாற் 6:21-28
5மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.ஆபகூ 2:5
6மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;சங் 104:15 1தீமோ 5:23
7அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.எபே 5:18
8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.நீதி 24:7 நீதி 24:11 நீதி 24:12 1சாமு 19:4-7 1சாமு 20:32 1சாமு 22:14 1சாமு 22:15 எஸ்தர் 4:13-16 யோபு 29:9 யோபு 29:17 சங் 82:3 சங் 82:4 எரே 26:16-19 எரே 26:24-19 எரே 38:7-10 யோவா 7:51
9உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.நீதி 16:12 நீதி 20:8 லேவி 19:15 உபா 1:16 உபா 16:18-20 2சாமு 8:15 சங் 58:1 சங் 58:2 சங் 72:1 சங் 72:2 யோபு 29:12 யோபு 29:15 யோபு 29:16 ஏசா 1:17 ஏசா 1:23 ஏசா 11:4 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 5:28 எரே 22:3 எரே 22:15 எரே 22:16 எரே 23:5 தானி 4:27 ஆமோ 5:11 ஆமோ 5:12 சகரி 7:9 சகரி 9:9 யோவா 7:24 எபிரெ 1:9 வெளிப் 19:11
10குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.நீதி 12:4 நீதி 18:22 நீதி 19:14 ரூத் 3:11 பிரச 7:28 உன்ன 6:8 உன்ன 6:9 எபே 5:25-33
11அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.2இரா 4:9 2இரா 4:10 2இரா 4:22 2இரா 4:23 1பேது 3:1-7
12அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.1சாமு 25:18-22 1சாமு 25:26-22 1சாமு 25:27-22
13ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.ஆதி 18:6-8 ஆதி 24:13 ஆதி 24:14 ஆதி 24:18-20 ஆதி 29:9 ஆதி 29:10 யாத் 2:16 ரூத் 2:2 ரூத் 2:3 ரூத் 2:23 ஏசா 3:16-24 ஏசா 32:9-11 அப் 9:39 அப் 9:40 1தெச 4:11 2தெச 3:10-12 1தீமோ 5:10 1தீமோ 5:14 தீத் 2:5
14அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.நீதி 31:24 1இரா 9:26-28 2நாளா 9:10 எசே 27:3-36
15இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.யோசு 3:1 2நாளா 36:15 சங் 119:147 சங் 119:148 பிரச 9:10 மாற் 1:35 ரோம 12:11
16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.யோசு 15:18 உன்ன 8:12 மத் 13:44
17தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.1இரா 18:46 2இரா 4:29 யோபு 38:3 லூக் 12:35 எபே 6:10 எபே 6:14 1பேது 1:13
18தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.ஆதி 31:40 சங் 127:2 மத் 25:3-10 1தெச 2:9 2தெச 3:7-9
19தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.யாத் 35:25 யாத் 35:26
20சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.நீதி 1:24 ரோம 10:21
21தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.நீதி 25:20
22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.நீதி 7:16
23அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.நீதி 12:4
24மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.நீதி 31:13 நீதி 31:19 1இரா 10:28 எசே 27:16 லூக் 16:19
25அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.யோபு 29:14 யோபு 40:10 சங் 132:9 சங் 132:16 ஏசா 61:10 ரோம 13:14 எபே 4:24 1தீமோ 2:10 1பேது 5:5 1பேது 5:6
26தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.நீதி 31:8 நீதி 31:9 நியா 13:23 1சாமு 25:24-31 2சாமு 20:16-22 2இரா 22:15-20 எஸ்தர் 4:4 எஸ்தர் 5:8 எஸ்தர் 7:3-6 எஸ்தர் 8:3-6 லூக் 1:38 லூக் 1:42-56 அப் 18:26 எபே 4:29 கொலோ 4:5
27அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.நீதி 14:1 1தெச 4:11 2தெச 3:6 1தீமோ 5:10 தீத் 2:4
28அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து:நீதி 31:1 1இரா 2:19 சங் 116:16 2தீமோ 1:5 2தீமோ 3:15-17
29அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.உன்ன 6:8 உன்ன 6:9 எபே 5:27
30செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.நீதி 6:25 நீதி 11:22 2சாமு 14:25 எஸ்தர் 1:11 எஸ்தர் 1:12 எசே 16:15 யாக் 1:11 1பேது 1:24
31அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.நீதி 31:16 நீதி 11:30 சங் 128:2 மத் 7:16 மத் 7:20 ரோம 6:21 ரோம 6:22 பிலிப் 4:17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.