| 1 | மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி. | நீதி 19:22 நீதி 12:26 நீதி 15:16 நீதி 16:8 நீதி 28:6 சங் 37:26 மத் 16:26 யாக் 2:5 யாக் 2:6 |
| 2 | ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். | நீதி 10:21 பிரச 12:9 ஏசா 27:11 ஓசி 4:6 யோவா 16:3 ரோம 10:2 பிலிப் 1:9 |
| 3 | மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும். | ஆதி 3:6-12 ஆதி 4:5-14 எண் 16:19-41 எண் 17:12 எண் 17:13 1சாமு 13:13 1சாமு 15:23 1சாமு 22:13-23 1இரா 20:42 1இரா 20:43 2இரா 3:9 2இரா 3:10 2இரா 6:33 2நாளா 16:9 2நாளா 16:10 அப் 13:45 அப் 13:46 |
| 4 | செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான். | நீதி 19:6 நீதி 19:7 நீதி 14:20 லூக் 15:13-15 |
| 5 | பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. | நீதி 19:9 நீதி 6:19 நீதி 21:28 யாத் 23:1 உபா 19:16-21 சங் 120:3 சங் 120:4 தானி 6:24 |
| 6 | பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன். | நீதி 19:12 நீதி 16:15 நீதி 29:26 ஆதி 42:6 2சாமு 19:19-39 யோபு 29:24 யோபு 29:25 சங் 45:12 மத் 2:11 |
| 7 | தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே. | நீதி 19:4 நீதி 14:20 சங் 38:11 சங் 88:8 சங் 88:18 பிரச 9:15 பிரச 9:16 யாக் 2:6 |
| 8 | ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். | நீதி 17:16 எசே 36:26 |
| 9 | பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். | ஏசா 9:15-17 எரே 23:25-32 எரே 28:15-17 எரே 29:31 எரே 29:32 எசே 13:22 2தெச 2:8-10 1தீமோ 4:1 1தீமோ 4:2 2பேது 2:1-3 வெளிப் 19:20 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 10 | மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது. | நீதி 30:21 நீதி 30:22 1சாமு 25:36 எஸ்தர் 3:15 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:12-14 ஓசி 7:3-5 ஓசி 9:1 ஆமோ 6:3-6 லூக் 16:19 லூக் 16:23 யாக் 4:9 |
| 11 | மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. | நீதி 12:16 நீதி 14:29 நீதி 15:18 நீதி 16:32 நீதி 17:14 கொலோ 3:12 கொலோ 3:13 யாக் 1:19 |
| 12 | ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும். | நீதி 16:14 நீதி 16:15 நீதி 20:2 நீதி 28:15 எஸ்தர் 7:8 பிரச 8:4 தானி 2:12 தானி 2:13 தானி 3:19-23 தானி 5:19 தானி 6:24 லூக் 12:4 லூக் 12:5 |
| 13 | மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு. | நீதி 10:1 நீதி 15:20 நீதி 17:21 நீதி 17:25 2சாமு 13:1-18 பிரச 2:18 பிரச 2:19 |
| 14 | வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. | நீதி 13:22 உபா 21:16 யோசு 11:23 2கொரி 12:14 |
| 15 | சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான். | நீதி 19:24 நீதி 6:9 நீதி 6:10 நீதி 20:13 நீதி 23:21 நீதி 24:33 ஏசா 56:10 ரோம 13:11 ரோம 13:12 எபே 5:14 |
| 16 | கட்டளையை காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான். | நீதி 3:1 நீதி 29:18 சங் 103:18 பிரச 8:5 பிரச 12:13 எரே 7:23 லூக் 10:28 லூக் 11:28 யோவா 14:15 யோவா 14:21-23 யோவா 15:10-14 1கொரி 7:19 1யோவா 2:3 1யோவா 2:4 1யோவா 3:22 1யோவா 5:3 வெளிப் 22:14 |
| 17 | ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். | நீதி 14:21 நீதி 28:8 நீதி 28:27 2சாமு 12:6 பிரச 11:1 |
| 18 | நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே. | நீதி 13:24 நீதி 22:15 நீதி 23:13 நீதி 23:14 நீதி 29:15 நீதி 29:17 எபிரெ 12:7-10 |
| 19 | கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும். | நீதி 22:24 நீதி 22:25 நீதி 25:28 நீதி 29:22 1சாமு 20:30 1சாமு 20:31 1சாமு 22:7-23 1சாமு 24:17-22 1சாமு 26:21-25 2சாமு 16:5 2சாமு 16:6 |
| 20 | உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். | நீதி 1:8 நீதி 2:1-9 நீதி 8:34 நீதி 8:35 |
| 21 | மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். | நீதி 12:2 ஆதி 37:19 ஆதி 37:20 எஸ்தர் 9:25 சங் 21:11 சங் 33:10 சங் 33:11 சங் 83:4 பிரச 7:29 ஏசா 7:6 ஏசா 7:7 தானி 11:24 தானி 11:25 மத் 26:4 மத் 26:5 மத் 27:63 மத் 27:64 |
| 22 | நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி. | 1நாளா 29:2 1நாளா 29:3 1நாளா 29:17 2நாளா 6:8 மாற் 12:41-44 மாற் 14:6-8 2கொரி 8:2 2கொரி 8:3 2கொரி 8:12 |
| 23 | கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. | நீதி 10:27 நீதி 14:26 நீதி 14:27 சங் 19:9 சங் 33:18 சங் 33:19 சங் 34:9-11 சங் 85:9 சங் 103:17 சங் 145:18-20 மல்கி 3:16 மல்கி 3:17 மல்கி 4:2 அப் 9:31 |
| 24 | சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான். | நீதி 19:15 நீதி 6:9 நீதி 6:10 நீதி 12:27 நீதி 15:19 நீதி 24:30-34 நீதி 26:13-16 சங் 74:11 |
| 25 | பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். | நீதி 21:11 உபா 13:11 உபா 21:21 |
| 26 | தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். | நீதி 10:1 நீதி 17:25 நீதி 23:22-25 நீதி 28:14 நீதி 30:11 நீதி 30:17 உபா 21:18-21 லூக் 15:12-16 லூக் 15:30-16 |
| 27 | என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே. | நீதி 14:7 உபா 13:1-4 1இரா 22:22-28 மத் 7:15 மத் 16:6 மத் 16:12 மாற் 4:24 மாற் 7:6-14 யோவா 10:5 2கொரி 11:13-15 எபே 4:14 1தீமோ 4:7 1தீமோ 6:3-5 2பேது 2:1 2பேது 2:2 1யோவா 4:1 2யோவா 1:10 வெளிப் 2:2 |
| 28 | பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். | 1இரா 21:10 1இரா 21:13 அப் 6:11-13 |
| 29 | பரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது. | நீதி 3:34 நீதி 9:12 ஏசா 28:22 ஏசா 29:20 அப் 13:40 அப் 13:41 2பேது 3:3-7 |