| 1 | என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். | ஆபகூ 3:1 |
| 2 | சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். | சங் 35:15 ஏசா 38:13 |
| 3 | என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், | சங் 59:3 யோசு 22:22 1சாமு 20:8 1சாமு 22:8 1சாமு 22:13 1சாமு 24:9 1சாமு 26:18 1சாமு 26:19 2சாமு 16:7 2சாமு 16:8 யோபு 16:17-19 |
| 4 | என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், | சங் 55:20 சங் 109:5 ஆதி 44:4 நீதி 17:3 எரே 18:20 எரே 18:21 |
| 5 | பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைப் புழுதியிலே தாழ்த்தக்கடவன். (சேலா) | யோபு 31:5-10 யோபு 31:38-40 |
| 6 | கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. | சங் 3:7 சங் 12:5 சங் 35:1 சங் 35:23 சங் 44:26 சங் 68:1 சங் 68:2 ஏசா 3:13 |
| 7 | ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். | சங் 48:11 சங் 58:10 சங் 58:11 வெளிப் 11:17 வெளிப் 11:18 வெளிப் 16:5-7 வெளிப் 18:20 வெளிப் 19:2 |
| 8 | கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும். | சங் 9:8 சங் 11:4 சங் 82:1 சங் 96:13 சங் 98:9 ஆதி 18:25 அப் 17:31 ரோம 14:10-12 1கொரி 4:4 1கொரி 4:5 |
| 9 | துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். | சங் 9:5 சங் 9:6 சங் 10:15 சங் 10:18 சங் 58:6 சங் 74:10 சங் 74:11 சங் 74:22 சங் 74:23 ஏசா 37:36-38 தானி 11:45 அப் 12:23 |
| 10 | செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. | சங் 3:3 சங் 18:1 சங் 18:2 சங் 84:11 சங் 89:18 ஆதி 15:1 |
| 11 | தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன். | சங் 7:8 சங் 94:15 சங் 140:12 சங் 140:13 |
| 12 | அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். | சங் 85:4 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 31:18 எரே 31:19 எசே 18:30 எசே 33:11 மத் 3:10 அப் 3:19 |
| 13 | அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார். | சங் 11:2 சங் 45:5 சங் 64:3 சங் 64:7 சங் 144:6 உபா 32:23 உபா 32:42 யோபு 6:4 புலம் 3:12 புலம் 3:13 ஆபகூ 3:11 ஆபகூ 3:13 |
| 14 | இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். | யோபு 15:20 யோபு 15:35 ஏசா 33:11 ஏசா 59:4 ஏசா 59:5 யாக் 1:15 |
| 15 | குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். | சங் 35:7 சங் 119:85 யோபு 6:27 எரே 18:20 |
| 16 | அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். | சங் 36:4 சங் 36:12 சங் 37:12 சங் 37:13 1சாமு 23:9 1சாமு 24:12 1சாமு 24:13 1சாமு 26:10 1சாமு 28:19 1சாமு 31:3 1சாமு 31:4 1இரா 2:32 எஸ்தர் 9:25 மல்கி 2:3-5 |
| 17 | நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன். | சங் 35:28 சங் 51:14 சங் 71:15 சங் 71:16 சங் 98:2 சங் 111:3 சங் 145:7 |