இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 52

                   
புத்தகங்களைக் காட்டு
1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.சங் 54:3 1சாமு 21:7 1சாமு 22:9-19
2நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.சங் 50:19 சங் 64:2-6 சங் 140:2 சங் 140:3 நீதி 6:16-19 நீதி 30:14 எரே 9:3 எரே 9:4 எரே 18:18 மத் 26:59 அப் 6:11-13 அப் 24:1 அப் 24:5 வெளிப் 12:10
3நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)எரே 4:22 மீகா 3:2 ரோம 1:25 2தீமோ 3:4
4கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;1சாமு 22:18 1சாமு 22:19 யாக் 3:6-9
5தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா)சங் 7:14-16 சங் 55:23 சங் 64:7-10 சங் 120:2-4 சங் 140:9-11 நீதி 12:19 நீதி 19:5 நீதி 19:9 வெளிப் 21:8
6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:சங் 37:34 சங் 64:9 சங் 97:8 யோபு 22:19 மல்கி 1:5 வெளிப் 15:4 வெளிப் 16:5-7 வெளிப் 18:20 வெளிப் 19:1 வெளிப் 19:2
7இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.ஏசா 14:16 ஏசா 14:17 யோவா 19:5
8நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.சங் 1:3 சங் 92:12-14 எரே 11:16 ஓசி 14:6-8 ரோம 11:24
9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.சங் 145:1 சங் 145:2 சங் 146:2 எபே 3:20 எபே 3:21
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.