இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 44

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.சங் 42:1
2தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.சங் 78:55 சங் 80:8 சங் 105:44 சங் 135:10-12 சங் 136:17-22 யாத் 15:17 யாத் 15:19 யாத் 34:11 உபா 7:1 யோசு 10:42 யோசு 11:23 யோசு 21:43 நெகே 9:22-27
3அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.உபா 4:37 உபா 4:38 உபா 8:17 உபா 8:18 யோசு 24:12 சகரி 4:6 2கொரி 4:7
4தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.சங் 74:12 சங் 89:18 சங் 149:2 ஏசா 33:22
5உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.சங் 18:39-42 சங் 118:10-13 ஏசா 41:14-16 பிலிப் 4:13
6என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.சங் 20:7 சங் 33:16 சங் 33:17 ஓசி 1:7
7நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.சங் 140:7 சங் 144:10 யோசு 1:5 யோசு 10:8-10 யோசு 10:42-10 யோசு 11:6 யோசு 23:9 யோசு 23:10 நியா 2:18 நியா 7:4-7 1சாமு 7:8-12 1சாமு 14:6-10 1சாமு 17:47 2சாமு 7:10
8தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)சங் 34:2 ஏசா 45:25 எரே 9:24 ரோம 2:17 1கொரி 1:29-31
9நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.சங் 43:2 சங் 60:1 சங் 60:10 சங் 74:1 சங் 80:12 சங் 80:13 சங் 88:14 சங் 89:38-45 சங் 108:11 எரே 33:24-26 புலம் 3:31 புலம் 3:32 ரோம 11:1-6
10சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப்பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.லேவி 26:14 லேவி 26:17 லேவி 26:36 லேவி 26:37 உபா 28:25 யோசு 7:8 யோசு 7:12 1சாமு 4:17 1சாமு 31:1-7
11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.எரே 12:3 ரோம 8:36
12நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.உபா 32:30 ஏசா 50:1 ஏசா 52:3 ஏசா 52:4 எரே 15:13
13எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.சங் 79:4 சங் 80:6 சங் 89:51 எரே 24:9 எசே 36:19-23
14நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர்.உபா 28:37 1இரா 9:7 2நாளா 7:20 எரே 24:9
15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,யோசு 7:7-9 எஸ்றா 9:6 எரே 3:25
16என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.சங் 74:18 சங் 74:22 சங் 74:23 சங் 79:12 ஏசா 37:3 ஏசா 37:4 ஏசா 37:17 ஏசா 37:23 ஏசா 37:24
17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.தானி 9:13
18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,சங் 78:57 சங் 125:5 1இரா 15:5 யோபு 34:27 எரே 11:10 செப் 1:6 லூக் 17:32
19எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.சங் 38:8 சங் 60:1-3 எரே 14:17
20நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,சங் 44:17 சங் 7:3-5 யோபு 31:5-40
21தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.சங் 139:1-24 யோபு 31:4 யோபு 31:14 யோபு 34:21 யோபு 34:22 எரே 17:10 எரே 23:24
22உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.ரோம 8:36
23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.சங் 7:6 சங் 12:5 சங் 35:23 சங் 59:4 சங் 59:5 சங் 78:65 ஏசா 51:9 மாற் 4:38
24ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?சங் 10:1 சங் 10:11 சங் 13:1 சங் 43:1-4 உபா 32:20 யோபு 13:24
25எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.சங் 66:11 சங் 66:12 சங் 119:25 ஏசா 51:23 புலம் 4:5
26எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.சங் 26:11 சங் 130:7 சங் 130:8
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.