| 1 | மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. | சங் 44:1 சங் 45:1 சங் 46:1 சங் 47:1 சங் 48:1 சங் 49:1 சங் 84:1 சங் 85:1 எண் 16:1 எண் 16:32 எண் 26:11 1நாளா 6:33-37 1நாளா 25:1-5 |
| 2 | என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? | சங் 36:8 சங் 36:9 சங் 63:1 யோவா 7:37 வெளிப் 22:1 |
| 3 | உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. | சங் 80:5 சங் 102:9 2சாமு 16:12 |
| 4 | முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. | ரூத் 1:21 யோபு 29:2-25 யோபு 30:1-31 புலம் 4:1 லூக் 16:25 |
| 5 | என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். | சங் 42:11 சங் 35:14 சங் 43:5 சங் 55:4 சங் 55:5 சங் 61:2 சங் 142:2 சங் 142:3 சங் 143:3 சங் 143:4 1சாமு 30:6 மாற் 14:33 மாற் 14:34 |
| 6 | என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். | சங் 22:1 சங் 43:4 சங் 88:1-3 மத் 26:39 மத் 27:46 |
| 7 | உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. | யோபு 1:14-19 யோபு 10:17 எரே 4:20 எசே 7:26 |
| 8 | ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன். | சங் 44:4 சங் 133:3 லேவி 25:21 உபா 28:8 மத் 8:8 |
| 9 | நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். | சங் 18:2 சங் 28:1 சங் 62:2 சங் 62:6 சங் 62:7 சங் 78:35 |
| 10 | உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. | சங் 42:3 நீதி 12:18 லூக் 2:35 |
| 11 | என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். | சங் 42:5 சங் 43:5 |