| 1 | சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். | சங் 112:9 உபா 15:7-11 யோபு 29:12-16 யோபு 31:16-20 நீதி 14:21 நீதி 19:17 பிரச 11:1 பிரச 11:2 ஏசா 58:7-11 மாற் 14:7 லூக் 14:13 லூக் 14:14 2கொரி 9:8-14 கலா 2:10 |
| 2 | கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். | சங் 33:19 சங் 91:3-7 எரே 45:4 எரே 45:5 |
| 3 | படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். | சங் 73:26 2இரா 1:6 2இரா 1:16 2இரா 20:5 2இரா 20:6 2கொரி 4:16 2கொரி 4:17 பிலிப் 2:26 பிலிப் 2:27 |
| 4 | கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். | சங் 32:5 சங் 51:1-3 |
| 5 | அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். | சங் 22:6-8 சங் 102:8 |
| 6 | ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். | சங் 12:2 நீதி 26:24 நீதி 26:25 நெகே 6:1-14 நீதி 26:24-26 தானி 11:27 மீகா 7:5-7 லூக் 11:53 லூக் 11:54 லூக் 20:20-23 2கொரி 11:26 |
| 7 | என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து, | நீதி 16:28 நீதி 26:20 ரோம 1:29 2கொரி 12:20 |
| 8 | தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். | சங் 38:3-7 யோபு 2:7 யோபு 2:8 லூக் 13:16 |
| 9 | என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். | சங் 55:12-14 சங் 55:20-22 2சாமு 15:12 யோபு 19:19 எரே 20:10 |
| 10 | கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும். | சங் 57:1 சங் 109:21 |
| 11 | என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். | சங் 13:4 சங் 31:8 சங் 35:25 சங் 86:17 சங் 124:6 எரே 20:13 கொலோ 2:15 |
| 12 | நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். | சங் 25:21 சங் 94:18 |
| 13 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென். | சங் 72:18 சங் 72:19 சங் 89:52 சங் 106:48 1நாளா 29:10 எபே 1:3 வெளிப் 4:8 வெளிப் 5:9-14 வெளிப் 7:12 வெளிப் 11:17 |