இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 41

                   
புத்தகங்களைக் காட்டு
1சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.சங் 112:9 உபா 15:7-11 யோபு 29:12-16 யோபு 31:16-20 நீதி 14:21 நீதி 19:17 பிரச 11:1 பிரச 11:2 ஏசா 58:7-11 மாற் 14:7 லூக் 14:13 லூக் 14:14 2கொரி 9:8-14 கலா 2:10
2கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.சங் 33:19 சங் 91:3-7 எரே 45:4 எரே 45:5
3படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.சங் 73:26 2இரா 1:6 2இரா 1:16 2இரா 20:5 2இரா 20:6 2கொரி 4:16 2கொரி 4:17 பிலிப் 2:26 பிலிப் 2:27
4கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.சங் 32:5 சங் 51:1-3
5அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.சங் 22:6-8 சங் 102:8
6ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.சங் 12:2 நீதி 26:24 நீதி 26:25 நெகே 6:1-14 நீதி 26:24-26 தானி 11:27 மீகா 7:5-7 லூக் 11:53 லூக் 11:54 லூக் 20:20-23 2கொரி 11:26
7என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,நீதி 16:28 நீதி 26:20 ரோம 1:29 2கொரி 12:20
8தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.சங் 38:3-7 யோபு 2:7 யோபு 2:8 லூக் 13:16
9என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.சங் 55:12-14 சங் 55:20-22 2சாமு 15:12 யோபு 19:19 எரே 20:10
10கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.சங் 57:1 சங் 109:21
11என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.சங் 13:4 சங் 31:8 சங் 35:25 சங் 86:17 சங் 124:6 எரே 20:13 கொலோ 2:15
12நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.சங் 25:21 சங் 94:18
13இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.சங் 72:18 சங் 72:19 சங் 89:52 சங் 106:48 1நாளா 29:10 எபே 1:3 வெளிப் 4:8 வெளிப் 5:9-14 வெளிப் 7:12 வெளிப் 11:17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.