| 1 | கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். | சங் 24:4 சங் 86:4 சங் 143:8 1சாமு 1:15 புலம் 3:41 |
| 2 | என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். | சங் 7:1 சங் 18:2 சங் 22:1 சங் 22:5 சங் 22:8 சங் 31:1 சங் 34:8 சங் 37:40 சங் 71:1 ஏசா 26:3 ஏசா 28:16 ஏசா 41:16 ஏசா 49:23 ரோம 5:5 ரோம 10:11 1பேது 2:6 |
| 3 | உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. | சங் 27:14 சங் 33:20 சங் 37:34 சங் 40:1-3 சங் 62:1 சங் 62:5 சங் 123:2 ஆதி 49:13 ஏசா 25:9 ஏசா 40:31 புலம் 3:25 மீகா 7:7 ரோம 8:25 |
| 4 | கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். | சங் 5:1 சங் 5:8 சங் 27:11 சங் 86:11 சங் 119:27 சங் 143:8 யாத் 33:13 நீதி 8:20 ஏசா 2:3 எரே 6:16 |
| 5 | உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். | சங் 25:8 சங் 25:10 சங் 43:3 சங் 43:4 சங் 107:7 ஏசா 35:8 ஏசா 42:16 ஏசா 49:10 எரே 31:9 யோவா 8:31 யோவா 8:32 யோவா 14:26 யோவா 16:13 ரோம 8:14 எபே 4:21 1யோவா 2:27 வெளிப் 7:17 |
| 6 | கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவை அநாதி காலமுதல் இருக்கின்றனவே. | சங் 98:3 சங் 106:45 சங் 136:23 2நாளா 6:42 லூக் 1:54 லூக் 1:71 லூக் 1:72 |
| 7 | என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். | சங் 79:8 சங் 109:14 சங் 109:16 ஏசா 38:17 ஏசா 43:25 ஏசா 64:9 எபிரெ 8:12 எபிரெ 10:16-18 |
| 8 | கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். | சங் 119:68 |
| 9 | சிறுமைபட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். | சங் 22:26 சங் 76:9 சங் 147:6 சங் 149:4 ஏசா 11:4 ஏசா 61:1 செப் 2:3 மத் 5:5 கலா 5:23 யாக் 1:21 1பேது 3:4 1பேது 3:15 |
| 10 | கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. | சங் 18:25 சங் 18:26 சங் 28:4-6 சங் 37:23 சங் 37:24 சங் 91:14 சங் 119:75 சங் 119:76 சங் 138:7 ஆதி 5:24 ஆதி 17:1 ஆதி 48:15 ஆதி 48:16 ஏசா 43:2 ரோம 8:28 |
| 11 | கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும். | சங் 31:3 சங் 79:9 சங் 109:21 சங் 143:11 ஏசா 43:25 ஏசா 48:9 எசே 20:9 எசே 36:22 1யோவா 2:12 |
| 12 | கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். | சங் 111:10 நீதி 1:7 நீதி 2:5 நீதி 15:33 நீதி 16:6 பிரச 12:13 ஏசா 50:10 அப் 10:2 அப் 10:22 அப் 13:26 |
| 13 | அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். | உபா 33:12 உபா 33:26-29 நீதி 1:33 நீதி 19:23 நீதி 29:25 எசே 34:25-28 மத் 11:28 மத் 11:29 |
| 14 | கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். | ஆதி 18:17-19 எரே 13:18 நீதி 3:32 மத் 13:11 மத் 13:12 யோவா 7:17 யோவா 14:17 யோவா 14:21-23 யோவா 15:15 யோவா 17:6 1கொரி 2:14 எபே 1:9 எபே 1:18 கொலோ 3:3 வெளிப் 2:17 |
| 15 | என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். | சங் 121:1 சங் 121:2 சங் 123:2 சங் 141:8 |
| 16 | என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாய் இருக்கிறேன். | சங் 60:1 சங் 69:16 சங் 86:16 மீகா 7:19 |
| 17 | என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என் இடுக்கண்களிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். | சங் 34:19 சங் 38:1-8 சங் 42:7 சங் 77:2-4 ஆபகூ 3:17-19 1கொரி 4:11-13 2கொரி 4:8 2கொரி 4:9 |
| 18 | என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். | சங் 119:132 சங் 119:153 1சாமு 1:11 2சாமு 16:12 புலம் 5:1 லூக் 1:25 |
| 19 | என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். | சங் 3:1 சங் 3:2 சங் 27:2 சங் 27:12 சங் 38:19 சங் 56:2 சங் 57:4 சங் 138:7 சங் 143:3 2சாமு 16:11 2சாமு 17:2-4 லூக் 22:2 லூக் 23:5 லூக் 23:21-23 |
| 20 | என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன். | சங் 17:8 சங் 22:20 சங் 22:21 சங் 121:7 லூக் 23:46 அப் 7:59 |
| 21 | உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன். | சங் 7:8 சங் 18:20-24 சங் 26:1 சங் 26:11 சங் 41:12 1சாமு 24:11-13 1சாமு 26:23 நீதி 11:3 நீதி 20:7 தானி 6:22 அப் 24:16 அப் 25:10 அப் 25:11 |
| 22 | தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும். | சங் 14:7 சங் 51:18 சங் 51:19 சங் 122:6 சங் 130:8 |