| 1 | தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான். | 2சாமு 5:11 2சாமு 5:12-16 1இரா 5:1 1இரா 5:8-12 2நாளா 2:11 2நாளா 2:12 |
| 2 | கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான். | 1நாளா 17:17 2சாமு 7:16 சங் 89:20-37 |
| 3 | எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். | 1நாளா 3:1-4 உபா 17:17 2சாமு 5:13 1இரா 11:3 நீதி 5:18 நீதி 5:19 பிரச 7:26-29 பிரச 9:9 மல்கி 2:14 மத் 19:4 மத் 19:5 மத் 19:8 |
| 4 | எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், | 1நாளா 3:5-9 |
| 5 | இப்கார், எலிசூவா, எல்பெலேத், | 1நாளா 3:6 |
| 6 | நோகா, நெப்பேக், யப்பியா, |
| 7 | எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள். | 1நாளா 3:8 |
| 8 | தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான். | 1சாமு 21:11 2சாமு 5:17-25 |
| 9 | பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். | 1நாளா 11:15 2சாமு 5:18 2சாமு 23:13 ஏசா 17:5 |
| 10 | பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். | 1நாளா 14:14 1நாளா 13:3 1சாமு 23:2-4 1சாமு 23:9-12 2சாமு 2:1 2சாமு 5:19 2சாமு 5:23 |
| 11 | அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள். | 2சாமு 5:20 ஏசா 28:21 |
| 12 | அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன. | யாத் 12:12 யாத் 32:20 உபா 7:5 உபா 7:25 1சாமு 5:2-6 2இரா 19:18 |
| 13 | பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். | 1நாளா 14:9 2சாமு 5:22-25 1இரா 20:22 |
| 14 | அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, | 1நாளா 14:10 சங் 27:4 |
| 15 | முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார். | லேவி 26:36 2இரா 7:6 2இரா 19:7 அப் 2:2 |
| 16 | தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள். | ஆதி 6:22 யாத் 39:42 யாத் 39:43 யோவா 2:5 யோவா 13:17 யோவா 15:14 |
| 17 | அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார். | யோசு 6:27 2நாளா 26:8 சங் 18:44 |