| 1 | மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின் பேர் எப்சிபாள். | 2இரா 20:21 1நாளா 3:13 2நாளா 32:33 2நாளா 33:1-9 மத் 1:10 |
| 2 | கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, | 2இரா 21:7 2இரா 21:16 2இரா 16:2-4 2இரா 22:17 2நாளா 33:2-4 |
| 3 | தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான். | 2இரா 18:4 2இரா 18:22 2நாளா 32:12 2நாளா 34:3 |
| 4 | எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, | 2இரா 16:10-16 எரே 32:34 |
| 5 | கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, | 2இரா 23:4 2இரா 23:6 1இரா 6:36 1இரா 7:12 2நாளா 33:5 2நாளா 33:15 எசே 40:28 எசே 40:32 எசே 40:37 எசே 40:47 எசே 42:3 எசே 43:5 எசே 44:19 |
| 6 | தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான். | 2இரா 16:3 2இரா 17:17 லேவி 18:21 லேவி 20:2 லேவி 20:3 2நாளா 28:3 2நாளா 33:6 மீகா 6:7 |
| 7 | இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என்நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான். | 2இரா 23:6 2நாளா 33:7 2நாளா 33:15 |
| 8 | நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார். | 2இரா 18:11 2சாமு 7:10 1நாளா 17:9 2நாளா 33:8 |
| 9 | ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான். | 2நாளா 36:16 எஸ்றா 9:10 எஸ்றா 9:11 நெகே 9:26 நெகே 9:29 நெகே 9:30 சங் 81:10 தானி 9:6 தானி 9:10 தானி 9:11 லூக் 13:34 யோவா 15:22 யாக் 4:17 |
| 10 | ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது: | 2நாளா 33:10 2நாளா 36:15 நெகே 9:26 நெகே 9:30 மத் 23:34-37 |
| 11 | யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால், | 2இரா 23:26 2இரா 23:27 2இரா 24:3 2இரா 24:4 எரே 15:4 |
| 12 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி, | 2இரா 22:16 தானி 9:12 மீகா 3:12 |
| 13 | எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன். | 2இரா 17:6 ஏசா 10:22 ஏசா 28:17 ஏசா 34:11 புலம் 2:8 எசே 23:31-34 ஆமோ 7:7 ஆமோ 7:8 சகரி 1:16 |
| 14 | அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். | உபா 31:17 2நாளா 15:2 சங் 37:28 சங் 89:38-45 எரே 12:7 எரே 23:33 புலம் 5:20 ஆமோ 5:2 |
| 15 | தங்கள் பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போவார்கள் என்றார். | உபா 9:21 உபா 31:27 உபா 31:29 நியா 2:11-13 சங் 106:34-40 எசே 16:15-22 எசே 20:4 எசே 20:13 எசே 20:21 எசே 20:30 எசே 23:3 எசே 23:8-21 தானி 9:5-11 |
| 16 | கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான். | 2இரா 24:3 2இரா 24:4 எண் 35:33 உபா 21:8 உபா 21:9 எரே 2:34 எரே 7:6 எரே 15:4 எரே 19:4 மத் 23:30 மத் 23:31 மத் 27:6 லூக் 13:34 எபிரெ 11:37 |
| 17 | மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. | 2இரா 20:20 2இரா 20:21 2நாளா 33:1-20 |
| 18 | மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான். | 2நாளா 21:20 2நாளா 24:16 2நாளா 24:25 2நாளா 28:27 2நாளா 32:33 2நாளா 33:20 எரே 22:19 |
| 19 | ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத். | 1நாளா 3:14 2நாளா 33:21-23 மத் 1:10 |
| 20 | அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, | 2இரா 21:2-7 எண் 32:14 2நாளா 33:22 2நாளா 33:23 மத் 23:32 அப் 7:51 |
| 21 | தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு, |
| 22 | கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான். | 2இரா 22:17 உபா 32:15 1இரா 11:33 1நாளா 28:9 எரே 2:13 யோனா 2:8 |
| 23 | ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள். | 2இரா 12:20 2இரா 14:19 2இரா 15:25 2இரா 15:30 1இரா 15:27 1இரா 16:9 2நாளா 33:24 2நாளா 33:25 |
| 24 | அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள். | 2இரா 14:5 |
| 25 | ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. | 2இரா 21:17 2இரா 20:20 |
| 26 | அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான். | 1இரா 13:5 மத் 1:10 |