வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 53

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான். அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
2தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞான முள்ளவர்கள் உண்டோ என்று பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
3ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள். ஒவ்வொரு மனிதனும் தீயவன். நன்மையான காரியத்தைச் செய்பவன் ஒருவன் கூட இல்லை.
4தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்! ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப் பதில்லை. தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
5ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள். அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள். அத்தீயோரைக் தேவன் தள்ளிவிட்டார். எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள். அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப் பார்.
6சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக. தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார். அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான். இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சி கொள்வான்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.