வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 48

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் மேன்மையானவர். தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது. அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும். சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை. அதுவே பேரரசரின் நகரமாகும்.
3அந்நகரத்து அரண்மனைகளில் தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால் பெருங் கப்பல்களை உடைத்தீர்.
8ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர், பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர். நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது. யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12சீயோனைச் சுற்றி நட. நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13அந்த உயர்ந்த சுவர்களைப் பார். சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.