இணை வசன வேதாகமம்

Click to Subscribe

உபாகமம் 20

                   
புத்தகங்களைக் காட்டு
1நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.உபா 3:21 உபா 3:22 உபா 7:1
2நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்து வந்து, ஜனங்களிடத்தில் பேசி:எண் 10:8 எண் 10:9 எண் 31:6 நியா 20:27 நியா 20:28 1சாமு 14:18 1சாமு 30:7 1சாமு 30:8 2நாளா 13:12
3இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.சங் 27:1-3 ஏசா 35:3 ஏசா 35:4 ஏசா 41:10-14 மத் 10:16 மத் 10:28 மத் 10:31 எபே 6:11-18 1தெச 5:15 எபிரெ 12:12 எபிரெ 12:13 வெளிப் 2:10
4உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்.உபா 1:30 உபா 3:22 உபா 11:25 உபா 32:30 யாத் 14:14 யோசு 10:42 யோசு 23:10 2நாளா 13:12 2நாளா 32:7 2நாளா 32:8 சங் 144:1 சங் 144:2 ரோம 8:37
5அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைப்பண்ணவேண்டியதாகும்.உபா 1:15 உபா 16:18 எண் 31:14 எண் 31:48 1சாமு 17:18
6திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும்.உபா 28:1-30 லேவி 19:23-25 எரே 31:5
7ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.உபா 22:23-25 உபா 24:5 மத் 1:18
8பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.உபா 1:28 உபா 23:9 நியா 7:3 லூக் 9:62 அப் 15:37 அப் 15:38 வெளிப் 3:16 வெளிப் 21:8
9அதிபதிகள் ஜனங்களோடே பேசி முடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.
10நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.2சாமு 20:18-22 ஏசா 57:19 சகரி 9:10 லூக் 10:5 லூக் 10:6 அப் 10:36 2கொரி 5:18-21 2கொரி 6:1 எபே 2:17
11அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.லேவி 25:42-46 யோசு 9:22 யோசு 9:23 யோசு 9:27 யோசு 11:19 யோசு 11:20 யோசு 16:10 நியா 1:28 நியா 1:30-35 1இரா 9:21 1இரா 9:22 சங் 120:7 லூக் 19:14
12அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,
13உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,எண் 31:7-9 எண் 31:17-9 எண் 31:18-9 1இரா 11:15 1இரா 11:16 சங் 2:6-12 சங் 21:8 சங் 21:9 சங் 110:1 லூக் 19:27 2தெச 1:7-9
14ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.எண் 31:9 எண் 31:12 எண் 31:18 எண் 31:35-54 யோசு 8:2 யோசு 11:14 2நாளா 14:13-15 2நாளா 20:25 சங் 68:12 ரோம 8:37
15இந்த ஜாதிகளைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
16உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,உபா 7:1-4 உபா 7:16-4 எண் 21:2 எண் 21:3 எண் 21:35 எண் 33:52 யோசு 6:17-21 யோசு 9:24 யோசு 9:27 யோசு 10:28 யோசு 10:40 யோசு 11:11 யோசு 11:12 யோசு 11:14
17அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.ஏசா 34:5 ஏசா 34:6 எரே 48:10 எரே 50:35-40 எசே 38:21-23 வெளிப் 19:18
18அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.உபா 7:4 உபா 7:5 உபா 12:30 உபா 12:31 உபா 18:19 யாத் 23:33 யோசு 23:13 நியா 2:3 சங் 106:34-40 1கொரி 15:33 2கொரி 6:17 எபே 5:11 2தெச 3:14 1தீமோ 6:5 2தீமோ 2:17 2தீமோ 2:18 வெளிப் 18:3-5
19நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேகநாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.மத் 3:10 மத் 7:15-20 மத் 21:19 லூக் 13:7-9 யோவா 15:2-8
20புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம் போடலாம்.உபா 1:28 2நாளா 26:15 பிரச 9:14 ஏசா 37:33 எரே 6:6 எரே 33:4 எசே 17:17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.