| 1 | பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான். | தானி 5:1 தானி 5:22 தானி 5:30 தானி 8:1 எரே 27:7 |
| 2 | தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. | வெளிப் 7:1 |
| 3 | அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின. | தானி 2:32 தானி 2:33 தானி 2:37-40 சகரி 6:1-8 |
| 4 | முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்துநிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது. | உபா 28:49 2சாமு 1:23 ஏசா 5:28 ஏசா 5:29 எரே 4:7 எரே 4:13 எரே 25:38 எரே 48:40 புலம் 4:19 எசே 17:3 ஆபகூ 1:6-8 மத் 24:28 |
| 5 | பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது. | தானி 2:39 தானி 8:3 2இரா 2:24 நீதி 17:12 ஓசி 13:8 |
| 6 | அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது. | தானி 2:39 தானி 8:5-7 தானி 8:20-7 தானி 8:21-7 தானி 10:20 தானி 11:3-20 ஓசி 13:7 வெளிப் 13:2 |
| 7 | அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது. | தானி 7:2 தானி 7:13 |
| 8 | அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. | தானி 7:20-25 தானி 8:9-12 வெளிப் 13:11-13 |
| 9 | நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜூவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. | தானி 2:34 தானி 2:35 தானி 2:44 தானி 2:45 1கொரி 15:24 1கொரி 15:25 வெளிப் 19:18-21 வெளிப் 20:1-4 |
| 10 | அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. | சங் 50:3 சங் 97:2 சங் 97:3 ஏசா 30:27 ஏசா 30:33 ஏசா 66:15 ஏசா 66:16 நாகூ 1:5 நாகூ 1:6 |
| 11 | அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. | தானி 7:8 தானி 7:25 2பேது 2:18 யூதா 1:16 வெளிப் 13:5 வெளிப் 13:6 வெளிப் 20:4 வெளிப் 20:12 |
| 12 | மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. | தானி 7:4-6 தானி 8:7 |
| 13 | இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். | சங் 8:4 சங் 8:5 ஏசா 9:6 ஏசா 9:7 எசே 1:26 மத் 13:41 மத் 24:30 மத் 25:31 மத் 26:64 மாற் 13:26 மாற் 14:61 மாற் 14:62 லூக் 21:27 லூக் 21:36 யோவா 3:13 யோவா 5:27 யோவா 12:34 அப் 7:56 பிலிப் 2:6-8 எபிரெ 2:14 வெளிப் 1:7 வெளிப் 1:13 வெளிப் 1:18 வெளிப் 14:14 |
| 14 | சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். | தானி 7:27 சங் 2:6-8 சங் 8:6 சங் 110:1 சங் 110:2 மத் 11:27 மத் 28:18 லூக் 10:22 லூக் 19:11 லூக் 19:12 யோவா 3:35 யோவா 5:22-27 1கொரி 15:27 எபே 1:20-22 பிலிப் 2:9-11 1பேது 3:22 வெளிப் 3:21 |
| 15 | தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது. | தானி 7:28 தானி 8:27 எரே 15:17 எரே 15:18 எரே 17:16 ஆபகூ 3:16 லூக் 19:41-44 ரோம 9:2 ரோம 9:3 வெளிப் 10:9-11 |
| 16 | சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச் சொன்னது என்னவென்றால்: | தானி 7:10 தானி 8:13-16 தானி 10:5 தானி 10:6 தானி 10:11 தானி 10:12 தானி 12:5 தானி 12:6 சகரி 1:8-11 சகரி 2:3 சகரி 3:7 வெளிப் 5:5 வெளிப் 7:13 வெளிப் 7:14 |
| 17 | அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள். | தானி 7:3 தானி 7:4 தானி 2:37-40 தானி 8:19-22 |
| 18 | ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான். | தானி 7:22 தானி 7:27 சங் 45:16 சங் 149:5-9 ஏசா 60:12-14 2தீமோ 2:11 2தீமோ 2:12 வெளிப் 2:26 வெளிப் 2:27 வெளிப் 3:21 வெளிப் 5:10 வெளிப் 20:4 |
| 19 | அப்பொழுது மற்றவைகளையெல்லாம்பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப் போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக்குறித்தும், | தானி 7:7 தானி 2:40-43 |
| 20 | அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளைஅறிய மனதாயிருந்தேன். | தானி 7:8 தானி 7:11 தானி 7:23 தானி 8:9-11 |
| 21 | நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டளவும், | தானி 8:12 தானி 8:24 தானி 11:31 தானி 12:7 வெளிப் 11:7-9 வெளிப் 12:3 வெளிப் 12:4 வெளிப் 13:5-7 வெளிப் 13:8-18 வெளிப் 17:6 வெளிப் 17:14 வெளிப் 19:19 |
| 22 | இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன். | தானி 7:9-11 2தெச 2:8 வெளிப் 11:11-18 வெளிப் 14:8-20 வெளிப் 19:11-21 வெளிப் 20:9-15 வெளிப் 20:18 ஏசா 63:4 மத் 19:28 லூக் 22:29 லூக் 22:30 1கொரி 6:2 1கொரி 6:3 வெளிப் 1:6 வெளிப் 3:21 வெளிப் 5:10 வெளிப் 20:4 |
| 23 | அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும். | தானி 7:7 தானி 2:40 லூக் 2:1 |
| 24 | அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களை தாழ்த்திப்போட்டு, | தானி 7:20 வெளிப் 12:3 வெளிப் 13:1 வெளிப் 17:3 வெளிப் 17:12 வெளிப் 17:13 வெளிப் 17:16-18 |
| 25 | உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். | தானி 7:8 தானி 7:20 தானி 8:24 தானி 8:25 தானி 11:28 தானி 11:30 தானி 11:31 தானி 11:36 தானி 11:37 ஏசா 37:23 2தெச 2:4 வெளிப் 13:5 வெளிப் 13:6 வெளிப் 13:11 |
| 26 | ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். | தானி 7:10 தானி 7:11 தானி 7:22 2தெச 2:8 வெளிப் 11:13 வெளிப் 20:10 வெளிப் 20:11 |
| 27 | வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான். | தானி 7:14 தானி 7:18 தானி 7:22 சங் 149:5-9 ஏசா 49:23-26 ஏசா 54:3 ஏசா 60:11-16 செப் 3:19 செப் 3:20 சகரி 14:9 வெளிப் 20:4 |
| 28 | அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன். | தானி 8:17 தானி 8:19 தானி 11:27 தானி 12:9 தானி 12:13 |