| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 2 | மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள். | எசே 21:12 ஏசா 13:6 ஏசா 14:31 ஏசா 15:2 ஏசா 16:7 ஏசா 23:1 ஏசா 23:6 ஏசா 65:14 எரே 4:8 எரே 47:2 யோவே 1:5 யோவே 1:11 செப் 1:11 சகரி 11:2 யாக் 5:1 வெளிப் 18:10 |
| 3 | நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம். | எசே 7:7 எசே 7:12 சங் 37:13 ஒபதி 1:15 யோவே 2:1 செப் 1:7 செப் 1:14 மத் 24:33 பிலிப் 4:5 யாக் 5:9 வெளிப் 6:17 |
| 4 | பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும். | எசே 29:8 ஏசா 19:2 எரே 50:35-37 |
| 5 | எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள். | ஏசா 18:1 ஏசா 20:4 எரே 46:9 நாகூ 3:8 நாகூ 3:9 |
| 6 | எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவ்வெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | யோபு 9:13 ஏசா 20:3-6 ஏசா 31:3 நாகூ 3:9 |
| 7 | பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும். | எசே 29:12 எசே 32:18-32 எரே 25:18-26 எரே 46:1-51 |
| 8 | நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 28:24 எசே 28:26 எசே 29:6 எசே 29:9 எசே 29:16 சங் 58:11 |
| 9 | நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது. | எசே 30:5 எசே 30:6 ஏசா 18:1 ஏசா 18:2 ஏசா 20:3 ஏசா 20:5 செப் 2:12 |
| 10 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன். | எசே 29:4 எசே 29:5 எசே 29:19 எசே 32:11-16 |
| 11 | இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள். | எசே 28:7 எசே 31:12 எசே 32:12 உபா 28:50 ஏசா 14:4-6 எரே 51:20-23 ஆபகூ 1:6-9 |
| 12 | அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். | எசே 29:3 ஏசா 19:4-10 ஏசா 44:27 எரே 50:38 எரே 51:36 நாகூ 1:4 வெளிப் 16:12 |
| 13 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி, | யாத் 12:12 ஏசா 19:1-15 எரே 43:12 எரே 43:13 எரே 46:25 செப் 2:11 சகரி 13:2 |
| 14 | பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து, | எசே 29:14 |
| 15 | எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன். | சங் 11:6 நாகூ 1:6 வெளிப் 16:1 |
| 16 | எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும். | எசே 30:8 எசே 30:9 எசே 28:18 |
| 17 | ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள். | ஆதி 41:45 |
| 18 | எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள். | எரே 2:16 |
| 19 | இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். | எசே 30:14 எசே 5:8 எசே 5:15 எசே 25:11 எசே 39:21 எண் 33:4 சங் 9:16 சங் 149:7 ரோம 2:5 வெளிப் 17:1 |
| 20 | பதினோராம்வருஷம் முதலாம் மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | எசே 1:2 எசே 26:1 எசே 29:1 எசே 29:17 |
| 21 | மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாகத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை. | எசே 30:24 சங் 10:15 சங் 37:17 எரே 48:25 |
| 22 | ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி, | எசே 29:3 எரே 46:25 |
| 23 | எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன். | எசே 30:17 எசே 30:18 எசே 30:26 எசே 29:12 எசே 29:13 |
| 24 | பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான். | எசே 30:25 நெகே 6:9 சங் 18:32 சங் 18:39 சங் 144:1 ஏசா 45:1 ஏசா 45:5 எரே 27:6-8 சகரி 10:11 சகரி 10:12 |
| 25 | பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோகும்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 30:19 எசே 30:26 எசே 29:16 எசே 29:21 எசே 32:15 எசே 38:16 எசே 38:23 எசே 39:21 எசே 39:22 சங் 9:16 |
| 26 | நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 30:17 எசே 30:18 எசே 30:23 எசே 6:13 எசே 29:12 தானி 11:42 |