| 1 | அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது. | 2நாளா 9:31 1இரா 2:10 1இரா 14:31 |
| 2 | ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான். | 2நாளா 31:20 1இரா 15:11 1இரா 15:14 லூக் 1:75 |
| 3 | அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, | உபா 7:5 1இரா 11:7 1இரா 11:8 1இரா 14:22-24 |
| 4 | தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து, | 2நாளா 29:21 2நாளா 29:27 2நாளா 29:30 2நாளா 30:12 2நாளா 33:16 2நாளா 34:32 2நாளா 34:33 ஆதி 18:19 யோசு 24:15 1சாமு 3:13 எஸ்றா 10:7-12 நெகே 13:9 நெகே 13:19-22 சங் 101:2-8 |
| 5 | யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது. | 2நாளா 34:4 |
| 6 | கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான். | 2நாளா 8:2-6 2நாளா 11:5-12 |
| 7 | அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது. | 2நாளா 32:5 அப் 9:31 |
| 8 | யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள். | 2நாளா 11:1 2நாளா 13:3 2நாளா 17:14-19 2நாளா 25:5 |
| 9 | அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான். | 2நாளா 12:2 2நாளா 12:3 2நாளா 16:8 2இரா 19:9 ஏசா 8:9 ஏசா 8:10 எசே 30:5 வெளிப் 16:14 |
| 10 | அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். | யோசு 19:4 நியா 1:17 |
| 11 | ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான். | 2நாளா 13:14 2நாளா 18:31 2நாளா 32:20 யாத் 14:10 1நாளா 5:20 சங் 18:6 சங் 22:5 சங் 34:6 சங் 50:15 சங் 91:15 சங் 120:1 அப் 2:21 |
| 12 | அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள். | 2நாளா 13:15 2நாளா 20:22 யாத் 14:25 உபா 28:7 உபா 32:39 யோசு 10:10 சங் 60:12 சங் 136:17 சங் 136:18 1கொரி 9:26 1கொரி 15:57 |
| 13 | அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து, | 2நாளா 14:14 ஆதி 10:1 ஆதி 10:19 ஆதி 20:1 ஆதி 26:1 |
| 14 | கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது. | 2நாளா 17:10 2நாளா 20:29 ஆதி 35:5 உபா 2:25 யோசு 2:9-11 யோசு 2:24-11 யோசு 5:1 1சாமு 14:15 2இரா 7:6 யோபு 15:21 சங் 48:5 சங் 48:6 ஏசா 31:9 |
| 15 | மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள். | 1நாளா 4:41 |